All posts by admin

Top 10 Places to Visit in Kanyakumari (Nagercoil)

Nagercoil, literally means “the temple of Nagas”, is a peace city positioned in the southernmost tip of Indian peninsula locked with Western Ghats on all sides. Nagercoil and its surroundings was earlier known as Nanjilnadu which was ruled by Chera, Chola, and Pandian kingdoms known for its rich cultural heritage.

Must visit places in kanuakumari

The Ancient sangam literatures reveal that the Nanjilnadu was occupied and ruled by Naga tribes. These rulers left behind themtemples, forts, rock cut caves, palaces with paintings, inscriptions carvings and much more!

We have listed few of must-see places in Nagercoil which you can’t afford to miss at all!

1. Padmanabhapuram Palace

Padmanabhapuram Palace in Nagercoil Kanyakumari
wikimedia.org

Padmanabhapuram Palace, is one of the chief attractions of Tamil Nadu located in Padmanabhapuram village of Kanyakumari District about 15 km from Nagercoil. It was built by King Iravi Varma Kulasekhara Perumal around 1601 A.Dwhich is best known for its antique and tricky woodworks. This Palace speaks history and stands as a hallmark of traditionalKerala style architecture. It spreads over an area of 6 acres which is around 24,000 m2.

The Padmanabhapuram place complex consists of Mantrasala (council chamber), Thai Kottaram (Queen Mother’s Palace), Nataksala (Performance Hall), Uppirikka Maliga (Central mansion), and Thekee kottaram (Southern Palace).

2. Vivekananda Rock Memorial

Vivekananda Rock Memorial is a popular tourist attraction in Kanyakumari built in 1970 in honor of Swami Vivekananda and his teachings. Vivekananda is the spiritual teacher, prophet, and patriot-monk of modern India. This is a very spiritual and pleasant place to visit, located on the tiny rock island in Kanyakumari. You can reach there by boat or ship. It’s been said that Vivekananda stayed here before he start to Chicago. Vivekananda Rock Memorial is interpreted as a symbol of unity and sanctity.

3. Devi Kanya Kumari Temple

Image Credit – Wikimedia

Devi Kanya Kumari temple is one among the 108 Shakthi Peethas in the world was built by sage Parshurama around 3000 year ago and dedicated to the goddess Bhagavathy Amman. It is located on the union of the Bay of Bengal, the Arabian Sea, and the Indian Ocean.You can find the sayings about this temple in the books of Ramayana, Mahabharata, and the Sangam works Manimekalai and Puranaanooru. The Devi stands as a charming young girl with a rosary in right hand as weapon, and a sparkling nose jewel that sheds lustrous radiance.

4. Kanyakumari Beach

Image Credit – Flickr

Kanyakumari beach is definitely one of the most beautiful beaches in south India with multi-colored sand and rocky shoreline. Due to strong frequent waves that hit rocky shore, makes the sea bath or step into shallow watermore dangerous. Hence, people are warned to get closer to seashore and they are asked to stay within the prescribed man-made zone. However you can feel the nature’s power and wildness when you visit this gold sanded mighty beach. You can shop for beautiful shells and can enjoy the enchanting view of the sea from the top of lighthouse.

5. Nagaraja Temple

Image Credit – Wikimedia

Nagaraja Temple, a temple of serpent King, is located in the heart of the Nagercoil town. It is 2000 years old built by King Marthanda Varma and it is the only temple built exclusively for Nagaraja worship in Tamil Nadu. Some believe that Nagercoil derived its name from this temple, which means Naga – The serpent and Coil -The Temple. The two main deities of this temple are Lord Krishna and Nagaraja.This temple attracts thousands of believers from all over the world every year.

6. Mahatma Gandhi Memorial

Mahatma Gandhi Memorial is located very near to Devi Kumari Amman Temple on the seashore. Here his ashes were kept for public view before immersion in the sea on February 12, 1948. It is built in Orissa Style of architecture and designed in such a way that on October 2, the rays of the sun falls exactly on the spot where his urn was kept.Its central shape is 79 feet high representing Mahatma’s age.

7. Kalikesam

Kalikesam is part of Kanyakumari wild life sanctuary protected by the Government of Tamil Nadu. A Kali Temple is situated here which attracts many devotees across India each year. Kalikesam is a scenic picnic place which will never fail to delight your eyes with outstanding prettiness of Mother Nature.

8. Thiruvalluvar Statue

Thiruvalluvar statue is located on the tiny island in Kanyakumari and adjacent to Vivekananda Rock memorial. It was built in honor of Thiruvalluvar, the Tamil Poet and the philosopher,who wrote Thirukkural. Thiruvalluvar statue is 133 feet (40.6m)height representing the 133 chapters in the Thirukkural. The statue symbolically and artistically signifies that the theme of Porul (Prosperity) and Inbam (Happiness) are based on Aram (Good deeds). There is no wonder that you will get thrilled by the hugeness of this statue.

9. Chitharal

Chitharal is a small village situated at a distance of 7 kms from Marthandam and 45 kms from Kanyakumari. It is famous for its rock cut temples and caves with rock cut sculptures. Age of this temples dates back to 9th Century A.D you can find Jain sculptures, Hindu deity sculptures which is been preserved by the Central Archeological Survey of India.

10. St Xavier Church

Image Credit – Wikimedia.org

Although in the world stage India is known as the country of Hinduism and Islam, the fact remains true that India is also one of the holy land visited by popular saints of Christianity. They established churches and spread the belief all over India. St. Xavier Church in Nagarcoil is definitely one among them built by Saint Francis Xavier around 1600 A.D in Kottar of Nagercoil.

This is a clean and heavenly pilgrimage Centre open for people from all caste and religion.

The work on the Rs 31 lake in Nagercoil road inaugurated mayor Meena Dev

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்பணி தொடங்கியதில் இருந்து நகரின் சாலை ஒவ்வொன்றும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளிக்கின்றன. தார்சாலைகளாக இருந்த அனைத்தும் குண்டும், குழியுமான நிலையில் படுகோரமாகவும், கிராமப்புறங்களில் உள்ள மண் சாலைகளைப் போன்றும் காட்சி அளிக்கின்றன. மழைகாலங்களில் சேறும், சகதியுமாகவும், வெயில் காலத்தில் சாலையில் செல்வோர் முகத்தில் புழுதிவாரி தூற்றுவதாகவும் சாலைகள் அமைந்து விட்டன.

இதனால் சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணமாக உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து டபிள்யூ.சி.சி. சந்திப்பு செல்லும் சாலையும், கற்கோவில் பகுதியில் இருந்து டதி பள்ளிக்கு வரும் சாலையும் சீரமைக்கப்பட்டன. அதையடுத்து பாதாள சாக்கடை பணி முதன் முதலாக தொடங்கப்பட்ட பகுதி அமைந்துள்ள ராமன்புதூர் சந்திப்பு முதல் தட்டான்விளை வழியாக ஆயுதப்படை முகாம் சாலை வரையில் ரூ.31 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. இந்த பணியை நகரசபை தலைவர் மீனாதேவ்(Meena Dev) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா(BJP) மாவட்ட துணைத்தலைவர் தேவ், நகர தலைவர் ராகவன், பொதுச்செயலாளர் அஜித்குமார், கவுன்சிலர் ரமேஷ், தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் சதாசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Source : dailythanthi

Extensive rain in Kanyakumari District affects Normal Life

Widespread rain and downpour in many parts of Kanyakumari district affected normal life as many low-lying areas were inundated.

The PWD officials are closely monitoring the situation as the two major reservoirs in the district are getting a steady inflow. A flood warning looked imminent. Perunchani recorded a rainfall of 1.2 cm in the last 24 hours ending at 8 a.m. on Sunday.

Sea erosion and incursion were reported in coastal villages near Thengaipattinam, Azhikal, Pillaithope, Midalam, Kurumparai and Colachel two days ago. Now, the continuous rain not only hit the routine, but also resulted in traffic jams on many stretches. Production was suspended in salt pans and brick kilns.

Public Works Department officials said that storage level in Pechiparai dam was 45.73 ft (full level is 48 ft), with an inflow of 2,651 cusecs. In Perunchani, the storage level was 75 ft (77 ft), with an inflow of 2,107 cusecs and discharge of 2,845 cusecs. As much as 537 cusecs was discharged from Chittar dam.

With intermittent rain continuing in the district, officials have cautioned the people living near riverbanks to move to safer places. In low-lying areas, transport was cut off and roads had been badly damaged.

The worst-affected were faresrmers in the district as many had just sown seeds in their fields. The rains had washed away seeds sown in close to 100 hecta.

In Alamparai, a long stretch of 200 feet road was not severely damaged. Over 30 dwellings suffered damage in the rain in Samiathope. Officials maintained that there was no casualty, and the residents had been moved to safety.

Boat service suspended

For the third consecutive day, boat service to Thiruvalluvar statue in Kanyakumari remained suspended due to heavy wind accompanied by rain, the officials said. Triveni Sangamam, Sunset Park and Vivekanandar Memorial witnessed a huge turnout of tourists.

Source: The Hindu

Rain and Drizzle expected to be continue in Kanyakumari District

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளம் பொங்கிப் பாய்ந்தது.

சாரல் மழை

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் தெரியாத அளவுக்கு அவ்வப்போது மழை பெய்து மண்ணை குளிர வைத்து விட்டது. இடை இடையே இடியுடன் கனமழை பெய்ததால் அணைகளும் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 வாரமாக வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சாரல்மழை இதமாக பெய்கிறது. சாரல்மழை நேற்றும் பல இடங்களில் பெய்தது. சில இடங்களில் சற்று பலமாக மழை பெய்தது.

கோழிப்போர்விளையில் அதிகம்பேச்சிப்பாறை-10.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார் (1) – 18.2, சிற்றார் (2) – 11.6, பொய்கை-5.4, மாம்பழத்துறையாறு-20, இரணியல்-4.2, ஆனைக்கிடங்கு-18, குளச்சல்-10, குருந்தன்கோடு-23.6, அடையாமடை-13, கோழிப்போர்விளை-40.5, முள்ளங்கினாவிளை-38, புத்தன்அணை-15.4, திற்பரப்பு-24, நாகர்கோவில்-14.8, பூதப்பாண்டி-1.5, சுருளோடு-13, பாலமோர்-6.5, மயிலாடி-10.2, கொட்டாரம்-20.2.மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 40.5 மி.மீட்டரும், அதற்கு அடுத்தபடியாக முள்ளங்கினாவிளையில் 38 மி.மீ., திற்பரப்பில் 24 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.



திற்பரப்பில் வெள்ளம்

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 246 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 131 கனஅடியும், சிற்றார் (1) அணைக்கு 100 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 10 கனஅடியும் தண்ணீர் வந்தது. பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து 216 கனஅடியும், பெருஞ்சாணி மற்றும் சிற்றார் (1) அணைகளில் இருந்து தலா 100 கனஅடியும் தண்ணீர் வெளியேறியது. மாம்பழத்துறையாறு அணைக்கு வந்த 10 கனஅடி நீர் உபரிநீராக திறந்து விடப்பட்டது.

திற்பரப்பு பகுதியில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர்.

Malayalam is gradually eliminating from Kanyakumari

தமிழைப் போன்றே மலையாளமும் குமரி மாவட்டத்தின் அடையாளம்!

தமிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழைத் திணிப்பது, குமரி மாவட்டத்திலிருந்து மலையாளத்தை அழித்தொழிப்பதற்குச் சமம். குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களை நசுக்குவது போன்றது அது!

குமரி மாவட்டத்தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மலையாளிகள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம்குறித்துக் கவலைப்படும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. நேற்றுவரை மலையாளத்தில் பாடம் படித்துவந்த அக்குழந்தைகள், வேறுவழியில்லாமல் தமிழ் வழியில் பாடம் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இப்படியான ஒரு பிரச்சினை இருக்கிறது என்று பலருக்குத் தெரியாது என்பதுதான் வேதனை. இதுதொடர்பாக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நாமத்தான் தமிழ்நாட்டுக்க கூட சேந்தாச்சி இல்லியா… இனி எதுக்கு மலையாளம் படிச்சிக் கொடுக்கணும்? மலையாளம் படிக்க இஷ்டம் உள்ளவிய கேரளத்துக்குப் போகட்டு” என்றார். மாட்டுக்கறி உண்பவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லட்டும் என்று சொன்ன முக்தர் அப்பாஸ் நக்வியும், கிரிராஜ் சிங்கும்தான் நினைவுக்கு வந்தனர்.

தமிழைப் போன்றே மலையாளமும் குமரி மாவட்டத்தின் அடையாளம் என்பதைப் பார்க்க மறுப்பதன் உச்ச குரலே மேற்சொன்ன வாதம். உண்மையில், குமரி மாவட்டத்தில் மலையாள மொழியும் செந்தமிழும் கோலோச்சி, மாவட்டத்தின் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், வரலாற்று பூர்வமான இந்த உண்மைகளை நாம் அறியாமல் இருக்கிறோம். இளைய சமூகத்தினரிடம் இம்மாவட்ட வரலாறு தொடர்பான புரிதல் இல்லை என்பதுதான் அடிப்படைப் பிரச்சினை. குறிப்பாக, தமிழகப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்டரைப் பற்றிய வரலாறோ, தோள் சீலைப் போராட்டம்பற்றிய குறிப்புகளோ இல்லை. புதிய தலைமுறையினர், வேறு வழிகள் மூலம் அரைகுறை யாக அறிந்த்கொள்ளும் தகவல்கள் கூட, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்தவையாகவோ மிகைப்படுத்தப் பட்டவையாகவோ உள்ளன.

உறுதிசெய்யப்பட்ட ஒற்றுமை

1956 வாக்கில் குமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கக் கேட்டுத் தீவிரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அதை மலையாள மொழிக்கு எதிரான போராட்டமாகத் திசைதிருப்பும் முயற்சி நடந்தது. இம்மாவட்டத்தில் பல ஆண்டுகாலம் வாழ்ந்துவந்த மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சூழல் உருவானது. மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகத் தீவிரமாக இருந்த இத்தகைய போக்கு, மறைந்த முன்னாள் விளவங்கோடு எம்.எல்.ஏ-வான டி. மணியின் பெரு முயற்சியால் கைவிடப்பட்டது. அவரது தலைமையில் ‘ஐக்கிய கேரளம் ஜிந்தாபாத், ஐக்கிய தமிழகம் ஜிந்தாபாத்’ என்று ஒற்றுமைக்கான கோஷம் மார்த்தாண்டம், அருமனை மேல்புறம் பகுதிகளின் தெருக்களில் கேட்டது. குமரி மாவட்டத்தில் இருந்த மலையாளிகளும் தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழ்வதை இந்த கோஷம் உறுதிசெய்தது.

தொடர்ந்து, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், அந்தந்தப் பகுதிகளில் வாழும் சிறுபான்மை மொழி பேசும் மக்களின் உரிமைகள்பற்றிய பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து பல்வேறு குழுக்களை அமைத்து ஆய்வு செய்தது மத்திய அரசு. அந்தக் குழுக்களின் அறிவுறுத்தலின்படி 1965-ல் தமிழக அரசு, குமரி மாவட்டத்தில் சிறுபான்மை மொழிகள் பேசும் மக்களின் மொழியுரிமையைப் பாதுகாக்கவும், அவர்களின் கலாச்சாரம், வழிபாட்டு உரிமைகளை உறுதிப்படுத்தவும் வழிவகை செய்யும் அரசாணை ஒன்றை வெளியிட்டது.

தமிழ் கற்பித்தல் சட்டம்

இந்நிலையில், கடந்த 2014-15-ம் கல்வியாண்டு இறுதித் தேர்வின்போது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. மலையாள மொழி மட்டுமே அறிந்த மாணவர்களுக்குத் தமிழில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப் பட்டன. இவ்விஷயம் சர்ச்சைக்குள்ளானபோது, 2006-ல் தமிழக அரசு கொண்டுவந்த ‘தமிழ் கற்பித்தல் சட்ட’த்தையே நடைமுறைப்படுத்தியதாக விளக்கம் தரப்பட்டது. இந்தச் சட்டம், தமிழையும் ஆங்கிலத்தையும் கட்டாயப் பாடமாகவும், அவரவர் தாய்மொழியை விருப்பப் பாடமாகவும் கற்றுக்கொடுக்கக் கூறுகிறது. இது தாய்மொழிக் கல்வியைச் சிதைத்துவிடும் என்ற அச்சம், தமிழ் தவிர வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் உண்டாகியிருக்கிறது.

மறுக்கப்படும் உரிமை

குமரி மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மாணவர்கள் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். விருப்பப் பாடமாக மலையாளம் இருக்கும் சூழலில் வேறொரு சிக்கலையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. பல அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் செலவைக் குறைக்கும் நோக்கில் மலையாள மொழி கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதன் மூலம், தாய்மொழியில், குறிப்பாக மலையாளத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. இந்தச் சட்டம் 1965-ல் வெளியிடப்பட்ட அரசாணையை மீறும் வகையில் உள்ளது.

குமரியின் பூர்வகுடிகள்

குமரி மாவட்டத்தில், மலையாள மொழிக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள், அது நாயர் சமூகத்தினருக்கு மட்டுமேயான மொழி என்பதுபோல் வாதிடுகிறார்கள். உண்மை அதுவல்ல. மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் வசிக்கும் சில கடற்கரையோர கிராமங்களிலும், ஈழவர், தலித் ஏன் நாடார் சமூகங் களிலும்கூட கணிசமான எண்ணிக்கையில் மலையா ளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர். இன்றும் குமரி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அனைவருமே தலைமுறை தலைமுறையாக குமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இப்படியான ஒரு அசவுகரிய சூழலில், தமிழைப் போன்றே மலையாள மொழியும் குமரி மாவட்டத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் இணக்கக் கோரி நடந்த போராட்டத்தின்போது, மார்த்தாண்டத்தில் நடந்த போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் முதலில் பலியான பப்பு பணிக்கர் ஒரு மலையாளி. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், செய்குத்தம்பி பாவலரும் குமரி மாவட்டத்தின் பெயரைத் தமிழ் உலகுக்கு அறியச் செய்தவர்கள் என்றால், மலையாளத்தில் அம்சி நாராயண பிள்ளையும், தனது ஊரின் பெயரை வைத்தே அறியப்படும் திருநயினார்குறிச்சியும், ரமேசன் நாயரும் குமரி மாவட்டத்தின் பெயரை மலையாள உலகம் அறியச் செய்தவர்கள்.

இவர்களில் அம்சி நாராயணபிள்ளை எழுதிய ‘வரிக வரிக சகஜரே, சகன சமர சமயமாய்’ எனும் பாடல், ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் பாடப்பட்ட உணர்ச்சிமிக்க பாடல். திக்குறிச்சி சுகுமாரன் நாயரும், குலசேகரத்தை அடுத்த கமுகறை புருஷோத்தமன் நாயரும் மலையாளத் திரையுலகில் குமரி மாவட்டத்தின் பெருமையை நிலைபெறச் செய்தவர்கள். இன்றைய மலையாள சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் ஜே.சி.டேனியல் கூட அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழர்தான்!

தவிர்க்கப்பட வேண்டிய திணிப்பு

தமிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழைத் திணிப்பது, குமரி மாவட்டத்திலிருந்து மலையாளத்தை அழித்தொழிப்பதற்குச் சமம். குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களை நசுக்குவது போன்றது அது. தமிழக அரசு இதைச் செய்யுமானால், பிற மொழித் திணிப்புகளை எதிர்ப்பதற்குத் தார்மீகரீதியாக எந்த உரிமையும் அதற்கு இல்லை என்றே அர்த்தமாகும்.

ஜான் மோசஸ் ராஜ்,

தொடர்புக்கு: johnmosesraj@gmail.com

Source : tamilhindu

Tatkal ‘booking Time Change and 50% cancellation fee if it withdraws tatkal train tickets

தட்கல்’ ரெயில் டிக்கெட்டுகளையும், ‘பிரிமியம்’ ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்தால், குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை திருப்பித்தர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான ‘தட்கல்’ டிக்கெட் முன்பதிவு நேரத்தையும் மாற்ற உள்ளது.

கட்டணம் வாபஸ்

‘தட்கல்’ முறையில் எடுக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டணத்தில் ஒரு பகுதி கூட திருப்பித்தரப்படுவது இல்லை. இந்நிலையில், உறுதி செய்யப்பட்ட ‘தட்கல்’ டிக்கெட்டுகளை ரத்து செய்தால், குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை திருப்பித்தர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக ஒரு காலவரையறை நிர்ணயிக்கப்படும் என்றும், ரத்து செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப, குறிப்பிட்ட சதவீத கட்டணம் திருப்பித்தரப்படும் என்றும் ரெயில்வே (போக்குவரத்து) உறுப்பினர் அஜய் சுக்லா நேற்று நிருபர்களிடம் கூறினார்.

இது, விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது.

நேரம் மாற்றம்

அதுபோல், ‘தட்கல்’ டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரத்தையும் மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏ.சி. பெட்டிகளுக்கு, தற்போது உள்ளதுபோல், காலை 10 மணிக்கு தொடங்கி காலை 11 மணிக்கு முன்பதிவு முடிவடையும்.

ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான ‘தட்கல்’ டிக்கெட்டுகள் முன்பதிவு நேரத்தில்தான் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணிக்கு முன்பதிவு முடிவடையும். இந்த புதிய முறை, ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என்றும் அஜய் சுக்லா கூறினார்.

பிரிமியம் ரெயில்களுக்கும் கட்டணம் வாபஸ்

‘பிரிமியம்’ ரெயில்களின் பெயரை ‘சுவிதா’ ரெயில்கள் என்று மாற்றம் செய்யவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரெயில்களிலும், டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டணத்தை வாபஸ் பெறும் முறை அமல்படுத்தப்படுகிறது.

ரத்து செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப, அதிகபட்சமாக 50 சதவீத கட்டணம் திருப்பித்தரப்படும்.

தட்கல் சிறப்பு ரெயில்கள்

இதுமட்டுமின்றி, கோடை கால, பண்டிகை கால சிறப்பு ரெயில்களைப் போல நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ‘தட்கல் சிறப்பு’ ரெயில்களை இயக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்தகைய ரெயில்களில் வழக்கமான ரெயில்களை விட கட்டணம் அதிகமாகவே இருக்கும்.

நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ஏற்கனவே ‘பிரிமியம்’ ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இத்தகைய ‘தட்கல் சிறப்பு’ ரெயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

முன்பதிவு

இந்த ரெயில்களுக்கு பயண தேதிக்கு 60 நாட்கள் முன்பிருந்து முன்பதிவு தொடங்கும். பயண தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு நிறுத்தப்படும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமின்றி, ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெறலாம்.

வழக்கமான ‘தட்கல்’ டிக்கெட்டுகளுக்கு பயணத்துக்கு முந்தைய நாள்தான் முன்பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source : Dinathanthi

Clean air Using House Plants

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்

House Plants : மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும்.

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்.

போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் நகர தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Nagercoil :நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நகர தெருக்களிலும் பிளாட்பாரங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில், நகரசபை கமிஷனர் ராமமூர்த்தி ஆலோசனைப்படி நகரமைப்பு அதிகாரி கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் கெபின்ஜாய், துர்காதேவி, சந்தோஷ்குமார், மகேஸ்வரி மற்றும் ஊழியர்கள் நேற்று, நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஆனைப்பாலம் கரியமாணிக்கபுரம் பகுதியில் நடந்தபோது ரோட்டோரம் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் வடிவீஸ்வரம் பெருமாள்கோவில் தெரு, ஆசாரிமார் வடக்குத்தெரு, வடசேரி குன்னுவிளை, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊழியர்களின் துணையோடு ராட்சத எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காமாட்சி அம்மன் கோவில் தெருவில் ஒரு பெட்டிக்கடை முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

நகரில் இதுபோல ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source : Dinathanthi

‘Nethili Fish’ dried and salted in Colachel by Fisherman’s

குளச்சல் (Colachel) மீனவர்களின் வலைகளில் அதிகமாக நெத்தலி மீன் கிடைத்தும், அதற்கான விலை போகாததால், கடற்கரை மணல் பரப்பில் நெத்தலி மீன்கள் உலரவைக்கப்பட்டு கருவாடாக்கப்படுகிறது.

நெத்தலி மீன்

குளச்சல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. விசைப்படகு மூலம் மீன் பிடிப்பது வருகிற 15–ந்தேதியுடன் முடைவடைய இருப்பதாகவும், அதன்பிறகு 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைக்காலமாகும்.

கடந்த சில மாதங்களாக நெத்தலி மீன் சீசன் காலமாகும். கடலில் கட்டுமரம் மற்றும் பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் நெத்தலி மீன்களை ஏராளமாக பிடித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதிகளான கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, குறும்பனை, வாணியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்தன. அவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குறைந்த விலைக்கே ஏலம் எடுத்து சென்றனர். மீனவர்களின் வலையில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்த போதிலும் அவை எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கருவாடாகிறது

இதைத்தொடர்ந்து மீனவர்களிடம் தேங்கிய நெத்தலி மீன்களை, குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவ பெண்கள் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தனர். பின்னர் அவற்றை கருவாடாக்க குளச்சல் கடற்கரை மணற்பரப்பில் உலர வைத்து உள்ளனர். கடலில் நெத்தலி மீன்கள் அதிக அளவில் கிடைத்தும் விலை போகாததால் தற்போது கருவாடாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலர வைத்துள்ள மீன்கள் கருவாடானதும் அவற்றை பெண்கள் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். அந்த வியாபாரிகள் அவற்றை வாங்கி தூத்துக்குடி, திருச்சி, கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

Source : Dinathanthi

Pon Radhakrishnan – இந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

இந்து மாணவர்கள்  கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து  வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆய்வு

மார்த்தாண்டத்தை (Marthandam)  அடுத்த பயணம் – திக்குறிச்சி ஆற்று இணைப்புபாலம் ரூ. 5½ கோடி செலவில் புதிதாக அமைக்கப் படுகிறது.  இதன் இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாலம் பணியை ஆய்வு செய்தார்.

அந்த இணைப்பு பாலத்தின் அருகில்,  2–வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்ளது.  பாலம் கட்டும் பணி நடந்த போது ஆற்று தண்ணீர், கோவிலின் உள்ளே புகாமல் இருப்பதற்கு வைக்கப் பட்டிருந்த தடுப்பு கற்கள் அகற்றப்பட்டது.  இதனால், ஆற்று வெள்ளம் சிவாலய சுவற்றில் மோதி, சுவர் சேதமடைந்துள்ளது.

இந்தநிலையில், பாலம் பணியை பார்வையிட வந்த மத்திய மந்திரியிடம்,  கோவிலை பாதுகாக்கும் வகையில்  தடுப்புசுவர் கட்டவும்,   சிவாலய  ஓட்டம் நடைபெறும் போது புனிதநீராடுவதற்கு வசதியாக படித்துறை அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.   இதற்கு மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தார்.

கல்வி உதவித்தொகை

காங்கிரஸ் கட்சி, இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். காங்கிரசார்,  தங்களின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து கூறி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவதற்கு வலியுறுத்த வேண்டும். இந்து மாணவர்கள்  கல்வி உதவித் தொகைக்காக மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித் தார்.

Pon Radhakrishnan

Source : Dinathanthi