All posts by admin

97.27% Pass Percentage registered by Class 10th of Kanyakumari District.

2015 பத்தாம் வகுப்பு தேர்வில், மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 97.27%  சதவீதத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

Kanykumar district 10th result 2015

Kanyakumari District 10th result 2015

Source : Tamil Hindu

 

Heavy rain lashes Kumari District

குமரி மாவட்டத்தில் 2–வது நாளாக கனமழை கொட்டியதால் கொட்டாரத்தில் 12½ செ.மீ. மழை பதிவானது. மேலும் தாழ்வான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கனமழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வந்தது. இதனால் வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலின் தாக்கமே குமரி மாவட்டத்தில் இல்லாமல் போனது. இதற்கிடையே லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து விட்டு– விட்டு கனமழை பெய்து வருகிறது.

நேற்று 2–வது நாளாகவும் இந்த மழை தொடர்ந்தது. நேற்று முன்தினத்தைக் காட்டிலும் நேற்று இடி– மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. 15 நிமிடம் அல்லது அரை மணி நேர இடைவெளியில் நாள் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தால் நாகர்கோவில் நகரில் உள்ள கேப்ரோடு, செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் ரோடு, கோட்டார் ரெயில்வே ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடு, கோர்ட்டு ரோடு, ஒழுகினசேரி ரோடு, வடசேரி ரோடு, வெட்டூர்ணிமடம் ரோடு உள்ளிட்ட நகரின் அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சாக்கடை கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் அமைந்துள்ள தெருக்கள் அனைத்திலும் கால்வாய்கள் மற்றும் வடிகால்களை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். சில பகுதிகளில் பாய்ந்தோடிய வெள்ளம் ஆட்டோக்களை கவிழ்க்கும் வகையில் ஓடியது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தன. நாகர்கோவில் ஏழகரம் ராமர்காலனி பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் அந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று குடியேறினர்.

நாகர்கோவில் செந்தூரான் நகர் 5–வது தெரு பகுதியில் செட்டிகுளம் வாய்க்கால் தண்ணீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின்போது சீறிப்பாய்ந்து வந்த மழை வெள்ளம் அந்த தடுப்புச்சுவரின் 200 அடி நீளத்துக்கு உடைத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. தற்போது  2 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் புகுந்த பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு மீண்டும்  வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளின் வெளி வாசல் வரை சென்று நின்றது. இதனால் மக்கள் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் தூங்காமல் விடிய– விடிய விழித்திருந்தனர்.

இதேபோல் காந்தி காலனி, செட்டிகுளம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர், பறக்கிங்கால், ஆஸ்ராமம், கரியமாணிக்கபுரம் போன்ற பகுதிகளில் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. இந்த மழை தொடர்ந்து பெய்தால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப்பகுதி மக்கள் எப்போது வெள்ளம் புகுமோ? என்ற அச்சத்துடனேயே வீடுகளில் வசித்து வருகின்றனர். மேலும் பழையாறு உள்ளிட்ட ஆறுகளிலும், பாசன வாய்க்கால்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான குளங்களும் நிரம்பி வருகின்றன.மழையால் பார்வதிபுரம் பகுதியில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து அதனை அகற்றியதும் போக்குவரத்து சீரானது.

12½ செ.மீ. மழை

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 57.2, பெருஞ்சாணி– 37.8, சிற்றார் 1– 38.8, சிற்றார் 2– 42.4, பொய்கை– 14.2, மாம்பழத்துறையாறு– 76, முக்கடல்– 95, நாகர்கோவில்– 114.2, பூதப்பாண்டி– 38, சுருளோடு– 51.4, கன்னிமார்– 72.5, ஆரல்வாய்மொழி– 14.2, பாலமோர்– 21.5, மயிலாடி– 79.6, கொட்டாரம்– 125.8, இரணியல்– 7, அடையாமடை– 93, குளச்சல்– 32, குருந்தங்கோடு– 66.6, அடையாமடை– 41, கோழிப்போர்விளை– 82, திற்பரப்பு– 95 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது. இதில் அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 12½ செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

முக்கால் அடி உயர்வு

இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 729 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 166 கன அடி தண்ணீரும், சிற்றார்–1 அணைக்கு 99 கன அடி தண்ணீரும், சிற்றார்–2 அணைக்கு 135 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 15 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

எனவே பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 35.30 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.85 அடியாகவும், சிற்றார்–1 அணை நீர்மட்டம் 13.91 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 14 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 7.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 54.12 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 4.70 அடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவுடன் இருப்பதால் அணைக்கு வரும் 15 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 3.90 அடியாக இருந்தது. மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒரே நாளில் முக்கால் அடிக்கு மேல் உயர்ந்து நேற்று 4.70 அடியாக உயர்ந்தது.

Kanyakumari student selected for EDT Programme in US

03KGRAMHI-Stude_MA_2394541eMasha Nazeem of Eraviputhoor Kadai in Kanyakumari district, who is doing Master of Technology course at SRM University, has been selected for the prestigious Entrepreneurship Development Training Programme in the United States.

She is one among the eight students selected by Motwani Jadeja Foundation (MJF), headquartered in California, for the Rajeev Circle Fellowship. The annual fellowship is offered by the MJF to bright students from various nations.

As part of this fellowship, the selected students from India would take part in Entrepreneurial Development Training Programmes in Google, Face Book, E-Bay, Auto Desk and Twitter from May 10 to 30.

Masha Nazeem has been selected for the fellowship for her innovative service rendered to school students under the Masha Innovation Centre, which was inaugurated by the then Collector Nagarajan. As many as four school students of Masha Innovation Centre have been selected for national-level competitions on inventiveness and creativity.

Ms. Nazeem said that the EDP training would help her take the centre to the national level to popularise science among school students.

She started designing science projects at the age of nine and has invented 12 science models. She has got five national and two international awards.

Source : The Hindu

மார்த்தாண்டம்– ரெயில்நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு

Marthandam:ரெயில் நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைப்பணி

மார்த்தாண்டம்   பஸ் நிலையம் அருகில்  இருந்து குழித்துறை ரெயில் நிலையம் வழியாக ஐரேனிபுரத்திற்கு ஒரு சாலை செல்கிறது இந்த    சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை 500 மீட்டர் தூரம் சிமெண்டு தளம் அமைக்கவும், ரெயில் நிலையத்தில் இருந்து ஐரேனிபுரம் வரை தார்தளம் அமைக்கவும் நெடுஞ்சாலைதுறை சார்பில் ரூ. 1 கோடி அனுமதிக்கப்பட்டது.

அதன்படி ரெயில்நிலையம் பகுதியில் இருந்து ஐரேனிபுரம் வரை சாலையில் தார்போடும் பணி நடந்து முடிந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை சிமெண்டு  தளம் போட பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, அந்தபகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கவும், பக்க ஓடைகள் தரமானதாக  அமைக்கவும் வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் வேலை நிறுத்தப் பட்டது.

மீண்டும் தொடங்கியது

அதன் பின்னர், நேற்று மார்த்தாண்டம் ரெயில் நிலைய சாலை தொடங்கும் இடத்தில் சாக்கடை கால்வாய்  இணைப்பிற்காக சிமெண்டு குழாய் பதித்து சாலை பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனால், சிமெண்டு குழாய் போடுவதால் தரம் இருக்காது எனக்கூறி அந்த பகுதி மக்களும், ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ராமச்சந்திரன், நல்லூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், கழிவுநீர் ஓடையில் சிமெண்டு குழாய் பதிக்கும் பணியும், சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியும் தொடங்கியது.

Source : Daily thanthi

மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி

Marthandam flyover : மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.போக்குவரத்து நெருக்கடிகுமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக மார்த்தாண் டம் விளங்குகிறது. இங்கு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், மற்றும் தினசரி சந்தை போன்றவை அமைந்துள்ளன. மார்த்தாண் டம் பகுதிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.மார்த்தாண்டத்தில் அமைந் துள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக அமைந் துள்ளது. இதனால், எப் போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.தொடரும் போக்குவரத்து நெருக்கடியால், திருவனந்த புரம், கன்னியாகுமரி போன்ற முக்கியமான பகுதிகளுக்கும், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர் களும், ரெயில் நிலையத் திற்கு செல்பவர்களும், மாணவ- மாணவிகளும், பொதுமக்க ளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் கடும் போக்குவரத்து நெருக் கடியால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.மேம்பாலம்இந்தநிலையில் மார்த் தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மாற்று ஒருவழிப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.இதற்கிடையே மார்த்தாண் டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.அதன் ஒருகட்டமாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் மண் ஆய்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக ஆழ்துளை போடப்படும் எந்திரம் மூலம், ஊழியர்கள் மண் ஆய்வு செய்து வருகிறார்கள். மண் ஆய்வுப்பணி தொடங்கி உள்ளதால் மார்த் தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கலாம் என பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது

Source : Daily Thanthi

குமரி மாவட்டத்துக்கு வருகிற 4, 10-ந் தேதிகளில் உள்ளூர் விடுமுறை

கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு

Kanyakumari District Local Holiday : வருகிற மார்ச் 4 மற்றும் 10-ந் தேதிகளில் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அய்யா அவதார தினவிழாஅய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளான வருகிற 4-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 4-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற ஏப்ரல் மாதம் 3-வது சனிக்கிழமையான 18-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாகும்.மண்டைக்காடு கோவில் கொடைவிழாமண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவின் முக்கிய திருவிழா நாளான 10-ம் திருவிழாவன்று (வருகிற 10-ந் தேதி) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 10-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் 2-வது சனிக்கிழமையான 9-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாகும். 4-ந் தேதி மற்றும் 10-ந் தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை தினத்தன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.

Source : Dailythanthi

நாகர்கோவில்: முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை சீர் செய்யும் சராசரி மனிதர்

Nagercoil: கொட்டும் மழை, அடிக்கின்ற வெயில் என மாறி, மாறி மிரட்டும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில், நாகர்கோவிலின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களோடு கைகோர்த்து, முழுக்க, முழுக்க சேவை மனப்பான்மையோடு போக்குவரத்தை சீர் செய்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த விஜயன் (50). அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 3 ஆண்டுகளாக என்பதுதான் ஆச்சர்யம்.

nagercoil-trafficநாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த விஜயனிடம் பேசினோம். `நாகர் கோவிலை அடுத்துள்ள சித்திரை திருமகாராஜபுரம் என்னோட சொந்த ஊரு. திருமணம் ஆகல்ல. அம்மா, அப்பா இருந்த வரைக்கும் தனியார் நிறுவன செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். அவங்க இறந்த பின்னாடி எனக்கு பணத் தேவை குறைஞ்சிடுச்சு.

பிழைப்புக்காக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ஒரு சேவை யாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். முழுசா 3 வருஷம் தாண்டிடுச்சு.

தினமும் காலையில் 8 மணிக்கு வந்துடுவேன். 11 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். பின்னர் மாலை 5 மணிக்கு வந்து விட்டு இரவு 8 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். வேப்பமூடு, கோட்டாறு, செட்டிக்குளம் பகுதிகளில் மாறி, மாறி டியூட்டி பார்ப்பேன். பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் டீ, காபி, வடைன்னு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவாங்க. தினமும் இரவு நாகர்கோவிலில் இருக்கும் என்னோட மாமா வீட்டுல போய் படுத்துப்பேன்.

செக்யூரிட்டியா இருக்கும் போது வாங்குன காக்கி சட்டை, பேன்டை போட்டுக்குவேன். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் நின்று கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது சிலர் மதித்து நடப்பர். சிலர் வித்தியாசமாக கூட பார்த்துட்டு போவாங்க.

யார் எப்படி நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு இந்த வேலை திருப்தியாய் இருக்கிறது” என்றவர் சாலை சீரமைப்பு பணிகளில் மூழ்கினார்.

<span style=”display:none;”>The average person will smooth traffic on the main road junctions</span>

ஓ.பி.சி. மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை

யுஜிசி என அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோருக்குப் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகளை (Fellowship) வழங்கிவருகிறது.

தற்போது, முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (Other Backward Class-OBC) மாணவ-மாணவிகளுக்குப் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.ஃபில். பிஎச்.டி. (முனைவர் பட்டம்) படிப்பதற்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். கலை, சமூக அறிவியல், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு உதவித்தொகை பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

(விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்ஐஆர்) நிறுவனத்தின் ஜெஆர்எஃப் உதவித்தொகை பெறக்கூடாது என்பது ஒரு நிபந்தனை). ஆண்டுதோறும் 300 ஓபிசி மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதில் 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தகுதி அடிப்படையில் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். அத்துடன் எதிர்பாராத செலவுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் (கலை படிப்புகள்), ரூ.12 ஆயிரமும் (அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம்) வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்பு கல்வி செயல்பாடுகள் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் கிடைக்கும். அதோடு எதிர்பாராத செலவினங்களுக்காகக் கலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,500-ம், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை விண்ணப்பதாரரின் வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் நேரடியாக (E-payment) வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி ஆண்டின் உதவித்தொகையைப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ugc.ac.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

ஓ.பி.சி. வகுப்பினர் யார்?

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்கும் நபர்கள் ஓ.பி.சி பிரிவின் கீழ் வருவார்கள். பி.சி (Backward Class ), எம்.பி.சி (Most Backward Class) பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தைத் தாண்டிவிட்டால் அவர்கள் ஓ.பி.சி. வகுப்பினராகக் கருதப்பட மாட்டார்கள்.

ஓபிசி வகுப்பினருக்கான சான்றிதழைத் தாசில்தார் வழங்குவார். இதற்கு உரிய படிவத்தில், தேவையான ஆவணங்களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.