Photos shared by Revanth U Revan
Misty Assambu
Assambu Estate in Nagercoil
Sub: Kanyakumari – Mangalore Overnight express train service reg. via. Ernakulam
Kanyakumari district people do not have any night train facility to travel to North Kerala and Mangalore. Students, businessmen and tourists frequently travel between Kanyakumari district and Mangalore, North Kerala. Moreover, a number of fishermen are employed in North Kerala. The train service will also link tourist destination Kanyakumari with Mangalore, an important access point for kollur mookambika temple and kukke subramaniya temple. For the benefit of the above passengers, we have been demanding daily night train service between Kanyakumari district and Mangalore, since 2005. Our genuine request has not been heard till now.
Therefore, it is kindly requested that necessary arrangements to be made to meet the huge public demand in order to operate direct overnight Train service between Kanyakumari and Mangalore at the earliest to facilitate the people of Kanyakumari district.
Its our humble request that this plea be heard, and acted upon favourably.
Thanking You
Please sign the petition here https://www.change.org/p/kanyakumari-mangalore-overnight-express-train-service-reg
The 500 year old tree in Isandhimangalam main Road on the way to Keeriparai Forest, Nagercoil.
Photos contributed by Bala Mithu. Source – https://www.facebook.com/bala.mithun/posts/733738033367053
“குமரி மாவட்டத்தில் புதிய தரமான சாலைகள் வேண்டி போராட்டம்”
புதிய தரமான சாலைகள் அமைத்து தரகேட்டு அரசை வலியுறுத்தி டிசம்பர் 1-ம் தியதி நம் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டியும், நமது முகப்பு படத்தை மாற்றியும் போராடுவோம்.
அனைவரும் பகிருங்கள் – போராட்டம் வெற்றியடைய செய்வோம்
நம் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 53 முக்கிய சாலைகள் பற்றிய அறிவிப்பு
1- திங்கள்நகர் – மணவாளக்குறிச்சி
2- திங்கள்நகர் – கருங்கல்
3- திங்கள்நகர் – தோட்டியோடு
4- செட்டியார்மடம் – திங்கள்நகர் – பட்டன்விளை – மேல்கரை
5- கருங்கல் – பூக்கடை
6- கருங்கல் – தேங்காப்பட்டணம்
7- ஆறுமுகம் மருத்துவமனை – சேரமங்கலம்
8- இரணியல் – தக்கலை
9- இரணியல் – ஞறோடு
10- இரணியல் – குருந்தன்கோடு
11- சுங்கான்கடை – ஆளூர்
12- வில்லுக்குறி- மனக்கரை – கண்டன்விளை
13- குளச்சல் – இராஜக்கமங்கலம்
14- பேயோடு – இராஜக்கமங்கலம்
15- பேயோடு – மேலசங்கரன்குழி
16- தக்கலை – திருவிதாங்கோடு – பள்ளியாடி
17- மைலோடு – அழகியமண்டபம்
18- அழகியமண்டபம் – முளகுமூடு
19- எட்டணி- பள்ளியாடி – இரவிபுதூர்க்கடை
20- வாகவிளை – நட்டாலம்
21- நட்டாலம் – மார்த்தாண்டம்
22- மார்த்தாண்டம் – குலசேகரம்
23- குலசேகரம் – தக்கலை
24- அருமனை – ஆற்றூர்
25- லெட்சுமிபுரம் – மண்டைக்காடு
26- இராஜக்கமங்கலம் – ஈத்தாமொழி
27- திங்கள்நகர் – பெரியாப்பள்ளி – பெத்தேல்புரம்
28- குமாரபுரம் – பெருஞ்சிலம்பு
29- களியங்காடு – இறச்சகுளம்
30- பார்வதிபுரம் – ஒழுங்குநேசரி
31- கொட்டாரம் – பெரியவிளை
32- மார்த்தாண்டம் – பாரக்குன்று
33- கழுவன்திட்டை – மருதங்கோடு
34- மார்த்தாண்டம் – தேங்காப்பட்டணம்
35- குழித்துறை – மனக்காலை
36- இளஞ்சிறை – கண்ணாமமூடு
37- தேங்காப்பட்டணம் – இனையம்
38- களியாக்கவிளை – மூவாட்டுகோணம்
39- புதுக்கடை – நித்திரவிளை – கொல்லங்கோடு
40- களியாக்கவிளை – மங்காடு – நித்திரவிளை
41- களியாக்கவிளை – நடைக்காவு – நித்திரவிளை
42- நித்திரவிளை – இரயுமன்துறை
43- துத்தூர் – நீரோடி
44- கிராத்தூர் – நம்பாளி
45- மங்காடு – நடைக்காவு – ஆலங்கோடு
46- நட்டாலம் – ஐரேனிபுரம்
47- காப்புக்காடு – ஐரேனிபுரம் – சடயங்குழி – தொலையாவட்டம்
48- சுவாமியார்மடம் – வேர்கிளம்பி – சித்திரங்கோடு
49- முட்டம் – அம்மாண்டிவிளை
50- முள்ளங்கனாவிளை – இடையன்கோட்டை – பாலூர்
51- முள்ளங்கனாவிளை – தொலையாவட்டம்
52- நாகர்கோவில் – மனக்குடி
53- நாகர்கோவில் நகராட்சி அனைத்து சாலைகள்
ஆசியா கண்டத்திலேயே, குளச்சல் துறைமுகம் தான், இயற்கையான துறைமுகம். எனவே, அதை, மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும்,” என்று, அமைச்சர் நிதின் கட்காரி, உறுதியளித்தார்.
ராஜ்யசபாவில், வர்த்தக கப்பல் போக்குவரத்து திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கொண்டு வந்தார். அந்த மசோதா மீது காங்கிரஸ் சார்பில், சுதர்சன நாச்சியப்பன், பேசியதாவது: குளச்சல் துறைமுகத்தை, அரசு மேம்படுத்த வேண்டும். அங்கு, மாநில அரசு, நிறைய முதலீடு செய்துள்ளது. மத்திய அரசும், உதவி செய்ய வேண்டும். கொழும்பு துறைமுகத்துடன், போட்டிபோடும் அளவுக்கு வளரும், தூத்துக்குடி துறைமுகத்தை, மேலும் மேம்படுத்த வேண்டும். தவிர, ராமேஸ்வரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில், சிறிய அளவிலான, கப்பல் போக்குவரத்து, துவங்க வேண்டும். தமிழகத்தின், மூக்கையூர் என்ற இடத்தில், காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட துறைமுகத்தை, புனரமைத்து, மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சுதர்சன நாச்சியப்பன், பேசினார்.
விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், ‘குளச்சல் துறைமுகம், மிக மிக, முக்கியமான துறைமுகம். ஆசியாவிலேயே, மிகவும் இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்த துறைமுகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டும் என்றால், அங்கு ஆழப்படுத்த பணிகளை மேற்கொண்டாக வேண்டும். 12 அடி அல்லது 14 அடி ஆழப்படுத்துவதற்கேகூட, பல ஆயிரம் கோடி, நிதி செலவிட வேண்டும். இந்நிலையில், குளச்சல் துறைமுகம், நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது; கைவசம் உள்ள, அந்த துறைமுகத்தை மேம்படுத்த, மத்திய அரசு உதவி செய்து, அதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும்,” என்றார்
[youtube url=”https://www.youtube.com/watch?v=L-_UwlgrPl8″ width=”560″ height=”315″]
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல இன்று காலை 7 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையம் வந்தது. 2–வது பிளாட்பாரத்தில் நின்று பயணிகளை இறக்கி விட்ட பின்னர் இந்த ரெயில் 8 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட இருந்தது.
இதில் ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு பிளாட்பாரம் மீது ஏறி நின்றது. அதிர்ஷ்டவசமாக ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் ரெயில் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பிளாட் பாரம் மீது ஏறிய போது பயங்கர சத்தம் கேட்டது. இதைக் கேட்ட பயணிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி ரெயில் நிலைய மேலாளர் பெஸ்டஸ் வில்சன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பிளாட்பாரம் மீது ஏறிய ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து காலை 8 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட வேண்டிய ரெயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த ரெயிலில் செல்வதற்காக வந்திருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர்.
Source : maalaimalar
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மறு கூட்டலில் 498 மதிப்பெண் எடுத்த நாகர்கோவில் மாணவி
குமரி மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
இவர் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் இவருக்கு 491 மதிப்பெண் கிடைத்தது. பாடவாரியாக தமிழ்–98, ஆங்கிலம்–100, கணிதம்–100, அறிவியல்–100, சமூக அறிவியல்–93 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.
மதிப்பெண் பட்டியலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, சமூக அறிவியல் பாடத்தில் எனக்கு நிச்சயம் 100 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்தேன், ஆனால் 93 மதிப்பெண்களே கிடைத்துள்ளது. எனவே அந்த பாடத்தின் விடைத்தாளை மறு கூட்டல் செய்ய வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என பெற்றோரிடம் கூறினார்.
மகளின் நம்பிக்கையை பார்த்து பெற்றோரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக கவுசல்யாவின் சமூக அறிவியல் பாட விடைத்தாளை மட்டும் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர்.
இதற்கான முடிவு இன்றுதான் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வெளியானது. இதில் கவுசல்யாவின் நம்பிக்கை வீண்போகவில்லை. அவர் கூறியபடியே இந்த பாடத்திலும் அவருக்கு 100 மதிப்பெண் கிடைத்தது.
ஏற்கனவே போடப்பட்ட 93 மதிப்பெண்ணில் இருந்து கூடுதலாக 7 மதிப்பெண் அதிகம் பெற்று அவர் 100 மதிப்பெண் பெற்றார்.
இதன் மூலம் கவுசல்யாவின் மொத்த மதிப்பெண் 491–ல் இருந்து 498 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கவுசல்யாவுக்கு குமரி மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
Source : maalaimalar (http://