All posts by admin

Food is a Medicine, Dr. G. Sivaraman

Americans are bombarded with information about “healthy eating,” but we suffer from higher rates of obesity and chronic disease than ever before. We are told one year to avoid fat and the next to avoid carbohydrates. It is enough to make anyone distrust nutritional advice altogether, particularly anything that claims that “food is medicine.”

Perhaps more than anything else in our lives, the foods we regularly eat help determine whether or not we will become ill, or remain healthy into older age. Whether vegetables, fruit, meat, oils or grains, foods contain influential substances including antioxidants, phytonutrients, vitamins, minerals, fatty acids, fiber and much more.

வில்லுக்குறி குளம் சுத்தப்படுத்தும் பணி முடிவடைந்தது

கடந்த ஒன்றரை மாதங்களாக வில்லுக்குறி குளம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதில் சந்தோஷமான காரியம் என்னவென்றால் இந்த குளத்தை சுத்தப்படுத்தும் பணி 20/11/2016 அன்றோடு முடிவடைந்தது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை 12 ஆண்டுகளாக முட் புதர்களும் செடி கொடிகள் ஆக்கிரமித்து வைத்திருந்தன. இதை சுத்தபடுத்துவது மிகுந்த சவாலான காரியம்மாக இருந்தது.

இதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்திய ஸ்க்ரீனர் குழுமத்தை சேர்ந்த ஜஸ்டின் , ஆன்ஷியோ அவர்கள், நண்பர் பிலெஸ்து மற்றும் இயற்கை உடன் ஒரு பயணம் கிளப் நிறுவனர் பிரதீஷ், மற்றும் நம் பேஜ் உறுப்பினர்கள் ஆல்ஜின், லிங்கேஷ், கணேஷ், அனந்து மற்றும் நண்பர்கள்(கன்னியாகுமரி மீம்ஸ்) அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எங்களுக்கு உதவியவர்கள்:

Indian Dental Association, Marthandam.
Makkal paathai.
SRKBV School Managing Director.
Kumaran Petroleum.
Tata Hitachi, JCB, Hyundai operators and owners.
Professor. Neelakandan and his brother (Locals).
Thinamani Newspaper.

மேலும் அடுத்த கட்டத்திற்கு இதனை வெற்றிகரமாக கொண்டு செல்வோம்.
இயற்கையை பாதுகாப்போம்.

– Team Kanyakumari memes.

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்!

உணவுதான் அமுதமும் விஷமும் ஆகிறது.நாம் உண்ணும் உணவே நம் பெரும்பாலானநோய்களுக்குக் காரணம். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம்ஆரோக்கியத்தை நம் வசமாக்காலாம்.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோய்.நம்முடைய உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கிறது. ‘சில உணவுகளுக்குப் புற்றுநோயைத்தடுக்கும் ஆற்றல் உண்டு’ என்கின்றன ஆய்வுகள். புற்றுநோயைத் தடுக்கும் 30 உணவுகள்என்னென்ன என்று பார்ப்போம்.

மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள், முதன்மையானது. இதில் உள்ளபாலிஃபீனால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. குர்க்குமின்என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாகக்காரணமான புண்களை ஆற்றும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.

பூண்டு: பூண்டில் உள்ள கந்தகம் (Sulfur)  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள பைட்டோகெமிக்கல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை. மேலும், புற்றுநோயால் வயிற்றில் ஏற்படும் கட்டிகளைக் குறைக்க பூண்டு உதவுகிறது.

இஞ்சி: பசியைத் தூண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர நோய்எதிர்ப்பு சக்தி கூடும். இஞ்சியின் காரத் தன்மைக்குக் காரணமான ‘ஜிஞ்சரால்’ புற்றுநோய்செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அழிக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும்ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது.

எள்: எள்ளில் தாமிரமும் கால்சியமும் நிறைவாக உள்ளன. வைட்டமின் பி மற்றும் இ, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம், புரதச்சத்து போன்றவையும் உள்ளன. தேன் மற்றும் எள்ளை ஒன்றாகக் கலந்து, தினமும் சாப்பிட்டுவர, தேனில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும். எள் வயிற்றில் உள்ள புண்ணைக்குணமாக்கும். இதில் உள்ள துத்தநாகம் தோல் புற்றுநோயைத் தடுக்கும்.

பட்டை: இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நம் உடலுக்குத்தேவையான எதிர்ப்புச் சக்தியைத் தந்து, நுரையீரல் புற்றுநோய் உட்பட சில வகைபுற்றுநோய்களையும் வராமல் காக்கிறது.

மிளகு: மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் மற்றும் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. மிளகில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, புற்றுநோய்செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

முளைகட்டிய பயறு: இதில் லைசின் எனப்படும் அமினோ அமிலம் அதிக அளவில்உள்ளது. சல்ஃபோராபேன் என்ற ரசாயனம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. பயறாகச்சாப்பிடுவதைக் காட்டிலும், முளைகட்டி பயறாகச் சாப்பிடும்போது, அதில்சல்ஃபோராபேன் அளவு 50 சதவிகிதம் அதிகரிக்கிறதாம். முழுப் பலனையும் பெற, முளைகட்டிய பயறைப் பச்சையாகச் சாப்பிடுவதே சிறந்தது.

பச்சைப் பட்டாணி: இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கோமெஸ்ட்ரோல்(coumestrol) என்ற நுண் ஊட்டச்சத்து இருப்பதால் ரத்தப் புற்றுநோய், நுரையீரல்புற்றுநோய், ஆசனவாய்ப் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காக்கிறது. ஒரு கப்பச்சைப் பட்டாணியில் 10 மி.கி அளவுக்கு கோமெஸ்ட்ரோல் உள்ளது. பச்சைப்பட்டாணியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல்தடுக்கலாம்.

முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸில் இருக்கும் நியூட்ரியன்ட்ஸ் புற்றுநோய் செல்களின்வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும். முட்டைக்கோஸில் காணப்படும் இன்டோல்-3-கார்பினோல் (Indole -3-carbinol) மார்பகப் புற்றுநோயிலிருந்துப் பாதுகாக்கிறது.

கேரட்: கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் எல்லா வகைப் புற்றுநோய்களின்தீவிரத்தையும் குறைக்கிறது. வேகவைக்காத பச்சை கேரட்டாக எடுத்துக்கொள்வதுமிகவும் நல்லது.

தக்காளி: வைட்டமின் சி, லைக்கோபீன், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும். குறிப்பாக, ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

வெங்காயம் – வெங்காயத்தாள்: புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்து வெங்காயம்.வெங்காயத்தில் உள்ள அலிசின், கந்தகம் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும்ஆற்றல் பெற்றது. மேலும், வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவது நல்லது. வெங்காயத்தாளில் உள்ள கந்தகம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. வைட்டமின்ஏ, இ, சி, கே, தயமின், தாமிரம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம்,மங்கனீஸ், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும்நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கானவாய்ப்பைக் குறைக்கிறது.

கீரைகள்: பச்சைக் கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், குடல்புற்றுநோயைத் தடுக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இதில் உள்ள வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஃபோலேட், நார்ச்சத்துக்கள் என அனைத்தும் இணைந்து புற்றுநோய் செல்களை அழிக்கின்றன. பொதுவாக ஆரஞ்சு நிறக் காய்கறி, பழங்கள் அனைத்தும் மார்பகப் புற்றுநோய், நுரையீரல்,பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

 

காளான்: இதிலுள்ள லெக்டின், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைகளில், உள்ளமோனோதெர்ஃபேன்கள் (Monoterpenes), புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன்களைஅழிக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்து உள்ள சிட்ரஸ் பழச்சாறுகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாய், தொண்டை மற்றும்வயிற்றில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கும்.

கிவிப் பழம்: ஃபோலிக் அமிலம், தாமிரம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, இ, கேநிறைந்தது. வைட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களைத் தடுக்கும். ரத்தசோகையைத்தடுக்கும். இதய நோய்களிலிருந்து காக்கும்.

ஆப்பிள்: உடல் உள் உறுப்புகளும் சுரப்பிகளும் செயல்பட உதவும் நுண்ணூட்டச்சத்துக்களும் பல்வேறு அமிலங்களும் ஆப்பிளில் உள்ளன. பச்சை ஆப்பிள்களில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட், செல்களை புதுப்பிக்கும் செயலைத் தூண்டுகிறது. புற்றுநோயைஉருவாக்கும் செல்களைத் தடுக்கிறது.

சோளம்: மாவுச்சத்து,  நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின், தயமின்(Thiamine) மற்றும் நியாசின் ஆகியவை உடலில் உள்ளஉப்பைக் கரைக்கும். புற்றுநோய் செல்களின் பாதிப்பைத் தடுக்கும்.

செர்ரி: மெலட்டோனின் (Melatonin) எனும் நோய் எதிர்ப்புப் பொருள், புற்றுநோயைத்தடுக்கும். புளிப்பான செர்ரி பழத்தில் லூட்டின், ஸி-சாந்தின், பீட்டாகரோட்டின் போன்றஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.

மாதுளை: இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்,ரிபோஃப்ளேவின், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்களை கொண்டது. முதுமையைத்தடுக்கும்.மாதுளை, ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை கொண்டது.

பேரீச்சம் பழம்: வைட்டமின் ஏ, இ, பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பாதாம்: இதில் உள்ள வைட்டமின் பி, புற்றுநோயை எதிர்க்கும் சக்திகொண்டது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறு, இதயக் கோளாறு, சர்க்கரைநோய், ரத்தசோகை,ஆண்மைக் குறைவு மற்றும் பித்தப்பைக் கல் போன்ற பிரச்னைகளைக் களைவதிலும்பாதாம் பருப்பு துணைபுரிகிறது.

புரோகோலி: இண்டோல்-3-கார்பினோல் (Indole -3-carbinol), சல்ஃபோராபைன் உள்ளதால்மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ப்ராஸ்டேட் புற்றுநோயைக் குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி புற்றுநோயைஉருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தடுக்கும்.

கிரீன் டீ: இதில் உள்ள கேட்டசின் என்ற பொருள், நுரையீரல், மார்பகம், ப்ராஸ்டேட்,குடல், சிறுநீர்ப்பை மற்றும் சருமப் புற்றுநோய்களைத் தடுக்கும். தினமும் ஒரு கப் டீசாப்பிடலாம்.

முட்டை: தினசரி ஒரு முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதால் மார்பகப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். முட்டையில் உள்ள கோலைன் என்றபுரதம் நரம்பு மண்டலப் பிரச்னைகளைக் குறைக்கிறது. மேலும் மூளையைக்கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும், நம் உடலில் உள்ள செல்களை சீராக இயக்கவும்உதவுகிறது.

மீன்: மீன்களில் உள்ள எண்ணெய் உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோயைக்குணமாக்கும். மீன்களில் உள்ள புரோலாக்ட்டின் என்ற சேர்மம் ரத்தப் புற்றுநோய்க்குக்காரணமான திசுக்களை அழிக்கும்.

ஆலிவ் எண்ணெய்:  ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு, புற்றுநோய்செல்லுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. ஆலிவ் எண்ணெயில் உள்ளபாலிஃபீனால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

அவகேடோ: உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பைஅதிகரிக்கும். புரதச்சத்து, மாவுச்சத்து மற்றும் லூட்டின் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட்நிறைந்திருப்பதால், ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும் பெண்களுக்குவரும் மார்பகப் புற்றுநோயையும் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம், ஒலியிக் அமிலம், வைட்டமின் கே உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். நரம்புமண்டலத்தை வலுப்படுத்தும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

டார்க் சாக்லேட்: இதில், கொக்கோ நிறைந்துள்ளது. கொக்கோவில் உள்ள பென்டாமெர்போன்ற ஃபிளேவனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும். புற்றுநோயில் இருந்துவிலகி இருக்க உதவும் மிக ருசியான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

Bhuvneshwar returns for last three Tests

India have brought Bhuvneshwar Kumar back into their squad for the last three Tests against England. They have also left out Gautam Gambhir, leaving M Vijay and KL Rahul as the only two specialist openers in the squad.

Gambhir, released from the squad during the second Test in Visakhapatnam, is playing for Delhi in their Ranji Trophy match against Rajasthan in Wayanad, and was out for 10 in the first innings on Tuesday. His opening partner Shikhar Dhawan, who has recovered from a thumb injury and was in the running for a Test comeback, made 38. Dhawan didn’t find a place in the squad either.

Bhuvneshwar, who took a five-wicket haul in the first innings of the second Test against New Zealand, was ruled out of the third Test with a back strain, and was not picked immediately upon recovering, with the selectors wanting him to prove his match-fitness in first-class cricket before returning to the Test team. Bhuvneshwar subsequently played for Uttar Pradesh in their Ranji Trophy defeat to Mumbai in Mysore, taking two wickets while bowling 36 overs across two innings. With the third Test to be played in Mohali, Bhuvneshwar could be in line for an immediate return if the pitch plays true to its traditional reputation of helping seam bowlers.

India squad for last three Tests: Virat Kohli (capt), Ajinkya Rahane, KL Rahul, M Vijay, Cheteshwar Pujara, Karun Nair, Wriddhiman Saha (wk), R Ashwin, Ravindra Jadeja, Jayant Yadav, Amit Mishra, Mohammed Shami, Umesh Yadav, Ishant Sharma, Bhuvneshwar Kumar, Hardik Pandya.

© ESPN Sports Media Ltd.

கறுப்புப் பணத்துக்கு எதிரான நீண்ட யுத்தத்தின் தொடக்கமே நோட்டு நடவடிக்கை: மோடி

கறுப்புப் பணத்துக்கு எதிரான நீண்ட, ஆழமான, நிலையான யுத்தத்தின் தொடக்கமே நோட்டு நடவடிக்கை என பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையால் சாமானிய ஏழை மக்கள் பயனடைவர் என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியபின்னர் முதன்முறையாக பாஜக நாடாளுமன்ற கட்சி இன்று கூடியது. இக்கூட்டத்தில், நோட்டு நடவடிக்கையை வரவேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு பிரச்சினைகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய தீமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதே எனது அரசின் இலக்கு. இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு பாடுபடுகிறது.

நமது சொந்த நலனுக்காகவோ அல்லது நமக்கு தெரிந்தவர் நலனைப் பேணவோ நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. 70 ஆண்டுகளாக ஏழை, நடுத்தர மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். கறுப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம் அவர்கள் உரிமைகளை சுரண்டியிருக்கின்றன.

இவற்றுக்கு எதிரான நீண்ட, ஆழமான, நிலையான யுத்தத்தை நடத்த வேண்டும் என்பதே நமது இலக்கு. அந்த வகையில், ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கை கறுப்புப் பணத்துக்கு எதிரான நீண்ட, ஆழமான, நிலையான யுத்தத்தின் தொடக்கமே தவிர முடிவல்ல.

கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் கறுப்புப் பணம் குறித்த தகவலை தாமாகவே முன்வந்து தகவல் அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்:

நோட்டு நடவடிக்கையை பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏழை, எளிய பொதுமக்களா அல்லது கறுப்புப் பண பதுக்கல்காரர்களா யாருக்கு தங்கள் ஆதரவு என்பதை எதிர்க்கட்சிகள் தாங்களே முடிவு செய்து கொள்ளட்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுதவிர நோட்டு நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகவும் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கருத்து:

பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்பது இந்தியாவை சிறந்த தேசமாக உருவாக்குவதற்காகவே. மாற்றத்துக்கு வித்திடும் முடிவுகள் அனைத்துமே வலி நிறைந்ததாக இருக்கும்” என்றார்.

நிதியமைச்சர் ஜேட்லி, நோட்டு நடவடிக்கையின் பன்முகத்தன்மை குறித்தும் அது பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி உதவும் என்பதையும் விவரித்தார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், “நோட்டு நடவடிக்கை நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவுமே எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Source: Tamil hindu

Kanyakumari : INTACH volunteers clean Pazhayar river

Pazhayar, a major river flowing in Kanniyakumari district and source of irrigation for farmers in its vicinity has become polluted due to the draining of sewage and unmindful dumping of garbage.
The worst stretch is between Ozhuginasery flyover and Suchindram as drainage is being let into it. This has resulted growth of weeds such as water Hyacinth and it blocks the free flow of water.
Pollution has prevented people living on its banks from using the river for their personal chores.
The Nagercoil Chapter of INTACH has begun an initiative to clean the river with the cooperation of civil society, said its Convener R.S. Lal Mohan.
Over 30 volunteers from Bhairavi Foundation, Aam Aadmi Party and Consumer Protection Centre have lent a helping hand to clean the river for about a kilometre from Suchindram Bridge to Ozhuginasery flyover, Dr. Lal Mohan said.
He added that the cleaning process would be carried out every Sunday between 9 a.m. and 3 p.m.

Natural home remedies for Fever

மருத்துவர் கு.சிவராமன்

மழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது காய்ச்சல். இப்போதெல்லாம் காய்ச்சல் வந்தாலே, `என்னது காய்ச்சலா? உஷாரா இருங்க… எல்லா பக்கமும் `டெங்கு’வாம், `சிக்குன்குனியா’வாம்… ஏதோ மர்மக் காய்ச்சலாம்!’ எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் இருந்தால், மருத்துவர் பரிசோதனைக்கு நீட்டும் பட்டியலில் டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா… என விதவிதமான பரிந்துரைகள்.
காய்ச்சல் ஏன் வருகிறது, மழைக்காலத்தில் அதைத் தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?
  • காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக்கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். உடலில் வெள்ளை அணுக்கள் – கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல்-மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை (ஜுரத்தை) உண்டாக்கும்.
  • இனிப்பு, பால், நீர்க்காய்கறிகளைத் தவிருங்கள். மருத்துவர் பால் அருந்தச் சொல்லியிருந்தால், அதில் மிளகு, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டும் அருந்துங்கள். இரவிலும் அதிகாலையிலும் வேண்டாம்!
  • ஆவி பிடித்தல், நெற்றிக்குப் பற்று இடுவது, சுக்கு-மல்லிக் கஷாயம் அருந்துதல்… என வாரம் ஒரு நாள் கண்டிப்பாகச் செய்யுங்கள். சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை, குழந்தைகளுக்கு நெஞ்சில் தடவிவிடுங்கள்.
  • மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கிராம்பு, கொள்ளுப் பயறு, நாட்டுக்கோழி முதலான, உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது.
  • காலையில் கரிசாலை முசுமுசுக்கை இலை போட்ட தேநீர், மதியம் தூதுவளை மிளகு ரசம், மாலையில் துளசி பச்சைத் தேயிலை தேநீர்… இவை மழைக்கால நோய் எதிர்ப்பு உணவுகள்.
  • ரத்தத் தட்டுக்களை உயர்த்த, சளியை வெளியேற்ற, இருமலை நீக்க, இரைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகச் சிறந்த மருந்து ஆடுதொடா இலைச்சாறு. மருத்துவர் ஆலோசனையுடன், சரியான இலைதானா என உறுதிப்படுத்திக்கொண்டு ஓரிரு இலையை அரைத்து, சாறு எடுத்து, மழைக்காலத்து சளி காய்ச்சலை எளிதில் போக்கலாம்.
  • இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் குழந்தைகளை அமர்த்தி, மாலை, இரவு நேரங்களில் பயணம் செய்யாதீர்கள். வாடைக் காற்று தாக்காமல் காதுகளைக் கவனமாக மூடிக்கொள்வது நல்லது!
  • முதலில், காய்ச்சல் வராமல் தடுக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். தண்ணீரைச் சேமிக்கும் பாத்திரத்தை மூடி வையுங்கள். வீட்டுக்கு வெளியே மூலையில் நீங்கள் போட்டு வைத்திருக்கும் பழைய பெயின்ட் டப்பா, ரப்பர் டயர், பாத்திரங்களை அகற்றுங்கள். வேப்பம் புகையோ, கார்ப்பரேஷன் கொசுவிரட்டிப் புகையோ காட்டுங்கள். கொதித்து ஆறிய தண்ணீரை மட்டுமே அருந்துங்கள். சூடாக, அப்போது சமைத்த உணவை உண்ணுங்கள். லேசான தும்மல், ஜுரம் இருக்கும்போது, பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.

Source : http://www.vikatan.com/news/health/71359-treatment-tips-for-fever-nalam-nallathu-1-dailyhealthdose.art

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறை கட்டியுள்ளார்

நித்திரவிளை: நித்திரவிளை அருகே பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறை கட்டியுள்ளார். குமரி மாவட்டம் சூழால் ஊராட்சியில் தமிழக – கேரள எல்லையை ஒட்டியுள்ள பல்லுக்குழி மேலவிளை பகுதியை சேர்ந்தவர் அப்பியான் மகள் ரோசி (55). திருமணமாகவில்லை. சிறுவயதில் இருந்தே முந்திரி ஆலைகளில் ரோசி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அக்கம்பக்கத்து வீடுகளில் உதவிகளுக்கும் சென்று வந்துள்ளார்.

 இதில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி மேலவிளை பகுதியில் ஏழரை சென்ட் இடம் வாங்கி, அதில் சிறிய வீடு வைத்து தனியாக வசித்து வருகிறார். மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் முந்திரி ஆலைக்கு செல்லாமல் இந்த பணிக்கு சென்று வந்தார். விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலைக்கு சென்றதால் சூழால் ஊராட்சி சார்பில் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவரை உறவினர்கள் யாரும் கண்டுக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
 மேலும் சிலர் நீ இறந்தால் உன்னை யார் அடக்கம் செய்வார்கள் என்று கிண்டலாக கேட்டுள்ளனர். இதனால் தனக்குத்தானே கல்லறை கட்ட திட்டமிட்ட ரோசி சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்லறை கட்டி வைத்துள்ளார். கடந்த மாதம் இதற்கான பணி தொடங்கியுள்ளார். தேவையான ஆழத்தில் பள்ளம் தோண்டி, கீழ்பகுதியில் இருந்தே கல்லால் கட்டி எழுப்பி மேலே அழகாக கடப்பா கல் பதித்து தனது படம், பெயரை பொறித்து சிலுவையும் அமைத்துள்ளார்.
 இவரை அடக்கம் செய்யவேண்டுமானால் ேமல் பகுதியை கழட்ட தேவையில்லை. தலை பகுதிக்கு கீழே வெளிப்பகுதியில் சிறிது பள்ளம் தோண்டினால் உள்ளே உள்ள பள்ளம் தெரியும். பெட்டியில் உடலை வைத்து தள்ளினால் உள்ளே சென்று விடும். இந்த அமைப்பில் அவர் தனக்கான கல்லறையை அமைத்து வைத்துள்ளார் இது குறித்து ரோசி கூறுகையில், “எனது ஊர் பல்லுக்குழி அருகே உள்ள செறுகுழி. எனது பெற்றோருக்கு நான் ஆறாவது மகள். ஐந்து சகோதரிகளுக்கும், தம்பிக்கும் திருமணம் நடந்து. அவர்கள் தனியாக வசிக்கின்றனர். இறக்கும் போது யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்று கருதி எனக்கு நானே கல்லறை கட்டிக்கொண்டேன் என்றார்.