All posts by admin

Alathankarai kabaddi club making international kabaddi players

கபடியே தெய்வம்.. மைதானமே கோயில்

alathankarai-kabaddi-outdoor-nagercoil

கபடி விளையாட்டே தெய்வம்.. மைதானமே கோயில்… கபடி என்ற உச்சரிப்பே மந்திரம்…’ என்ற கொள்கையுடன் பயணிக்கிறது அளத்தங்கரை கபடி குழு. கடந்த 27 ஆண்டுகளாக ஏழை சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து, இலவசமாக கபடி பயிற்சி அளித்து, அரசுப் பணிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது இக்குழு.

கன்னியாகுமரி மாவட்டம், அளத் தங்கரை கிராமத்தில், இயற்கை எழில் சூழ்ந்த மைதானத்தில் 150-க் கும் மேற்பட்ட இளைஞர்கள் தினமும் அதிகாலை 4.30 மணிக்கே கபடி களத்தில் கடும் பயிற்சி மேற்கொள்கின்றனர். தொடர்ந்து 3 மணி நேர பயிற்சிக்குப் பின், பள்ளி, கல்லூரிக்குச் செல்கின்றனர். மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி செய்கின்றனர்.

விளையாட்டு இட ஒதுக்கீடு

இங்கு பயிற்சியில் சேர்வதற்கு, புகைபிடித்தல், மது பழக்கம் இல்லாமல் இருப்பதும், விளையாட்டு ஆர்வமும், பெற்றோரை மதிக்கும் பண்புமே முதல் தகுதி. விளைவு, இலவசமாக பயிற்சி பெற்ற ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 1989-ம் ஆண்டில் இருந்து, பல்வேறு மாநிலங்களில் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அரசுப் பணி யில் உள்ளனர். சிறந்த உடல் தகுதியால் ராணுவம், காவல்துறை யில் தேர்வாகி பணிக்குச் சென்று விடுகின்றனர்.

alathankarai-kabaddi-coach-nagercoil

ஆட்டோ ஓட்டுநர், பனை தொழிலாளர், காய்கறி வியாபாரி, விவசாயத் தொழிலாளர், கட்டிடத் தொழிலாளர், ஆடு, மாடு மேய்ப்ப வர் போன்றவர்களின் மகன்கள் அதிகமானோர் உள்ளனர். குமரி மாவட்ட கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், அளத்தங்கரை கபடி குழுவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பிரதிபலன் எதுவும் பாராமல் இளைஞர்களை நல்வழி நடத்தி வரும் இந்த கபடி குழுவை நிர்வ கித்து வரும் மின்வாரிய அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:

தேசிய கபடி அணிக்காக விளை யாடினேன். இதனால் 1987-ம் ஆண்டில் எனக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. விளையாட் டால் நல்ல எதிர்காலம் இருப்பதால், பின்தங்கிக் கிடந்த எங்கள் கிராமத்தில் உள்ள மாணவர்கள் பலரை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவானது. இதன் விளைவாகவே ஊர் பெயரிலேயே கபடி குழுவை உருவாக்கினோம்.

alathankarai-kabaddi-team-nagercoil

கபடி வீரர்கள் என்றாலே முரட் டுக் குணம், மூர்க்கமான செயல் பாடுடன் இருப்பார்கள் என்ற நிலையே தொடக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், இங்கு தியானம், நேர்மை, ஒழுக்கம், வீரம், ஆன்மிகம் போன்றவற்றை கற்பித்து இளைஞர் களைப் பக்குவப்படுத்தினோம். பயிற்சி மைதானத்தின் அருகிலேயே வீடு எடுத்து அவர்களைத் தங்க வைத்து வருகிறோம். பள்ளி, கல் லூரியில் கல்விச் செலவு, உணவு போன்றவற்றைக் கபடி குழுவே ஏற்கிறது. இக்குழுவில் இருக்கும் சிறந்த வீரர்கள் ஆசிய போட்டி வரை சென்று ரொக்கப் பரிசுகளை பெற்று வந்தாலும் அந்த நிதி கபடி குழுவுக்கு வழங்கப்படுகிறது. இதுவே எங்கள் நிதி ஆதாரம்.

alathankarai-kabaddi-indian-team-nagercoil

இங்கு பயிற்சி பெறும் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதைப் பார்த்து, மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு சார்பில், கபடி உள் விளையாட்டரங்கம், மின்விளக்கு, பூங்கா உட்பட பல அடிப்படை வசதி களை ஏற்படுத்திக் கொடுத்துள்ள னர்.

இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் நாட்டுக்காகவும், மாநிலத்துக்காக வும், பல்கலைக்கழகம் மற்றும் மாவட்டத்துக்காகவும் விளையாடி வருகின்றனர். பெண்கள் கபடி அணிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 10 மாணவியர் தமிழக காவல் துறையிலும், இன்னும் பலர் ரயில்வே மற்றும் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அரசுப் பணியிலும் சேர்ந்துள்ளனர். 3 பெண்கள் இந்திய கபடி அணியிலும், நதியா என்ற வீராங்கனை ஆசிய இளையோர் போட்டியிலும் விளையாடி உள்ள னர்.

பயிற்சி போக பிற நேரங்களில் கிராமத்தின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைப்பது, மரம் நடுதல், இயற்கை வளங்களைக் காத்தல் போன்ற பணியில் கபடி வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இங்கு பயிற்சி பெறுபவர்களே பயிற்சி மையத்தைத் திறம்பட நிர்வகிக்கின்றனர் என்றார்.

alathankarai-kabaddi-indoor-nagercoil

Source : Tamil The Hindu

வேப்பமரத்தின் மருத்துவ பயன்கள்

veppam-illai

வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த  பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும்  அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.

வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை தணலில்  போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும்.  தினமும் வேப்ப இலைகளை  நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து  தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல்  நிற்கும்.

வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால்  பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான  தொல்லைகள் வரவே வராது. வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு  வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.

வேப்பமரம் நட்டு வைத்தால், வைத்தியர் தேவையில்லை!

நம் தேசத்தில் பாரம்பரிமாக, குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு ஆன்மீக சடங்குகளில் மட்டுமல்லாது, நோய்தீர்க்கும் மூலிகையாகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது வேம்பு! வயிற்றிலிருக்கும் பூச்சியை வெளியேற்றுவதற்கு சிறுபிள்ளைகளை மடக்கிப்பிடித்து, சங்கில் வைத்து வேப்பிலைச் சாற்றை ஊற்றிவிடும் அக்காமார்களை இன்றும் நம் கிராமங்களில் பார்க்கமுடியும்.

veppamaram-medical-benefitsவேப்பிலையைப் பற்றி சத்குரு அவர்கள் சொல்லும்போது, அபாரமான சக்தியைக் கொண்டது வேப்பிலை என்று குறிப்பிடுகிறார். ஈஷா யோகா மையத்தில் தினமும் காலையில் யோகப் பயிற்சிகளுக்கு முன்பு அனைவரும் சுண்டைக்காய் அளவு வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டைகளை உட்கொள்கின்றனர்.

கிராமங்களில் இன்றும் பூராண்-தேள் போன்ற விஷக்கடிகளுக்கு கூட, கடிபட்ட இடத்தில் வேப்பங்குலைகளை வருடி ‘பார்வை பார்த்தல்’ என்ற பெயரில் வைத்தியம் செய்வார்கள். ஆனால், இதெல்லாம் மூடநம்பிக்கைகள் என பொத்தாம் பொதுவாக ஒதுக்கி வைத்துவிட முடியுமா என்பதை அறிவியலும் மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும்!
ஏதோவொரு காரணத்தால் உடல் மற்றும் மனநிலையில் சோர்வு அல்லது பாதிப்பு ஏற்படும்போது அந்த மனிதருக்கு வேப்பிலை படுக்கையில் இருக்கும்போது, அவருக்குள் ஒருவித புத்துணர்ச்சி பிறக்கிறது. மேலும், வேப்ப மரம் தரும் நிழல் ஆரோக்கியம் தருவதாகவும் இருக்கிறது. நம் ஊர் அம்மன் கோயில்களில் வேப்பிலைகள் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
 வேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவையே! தொற்றுநோய்கள் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் விரைவாகப் பரவுவதற்கு காரணம், வேப்பமரங்கள் குறைவாக இருப்பதுதான். வேப்பமரத்திலிருந்து வீசும் காற்று ஒருவித மருத்துவகுணம் வாய்ந்ததாகும். இதன்மூலம் சுற்றுச்சூழலிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. நம் அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு வேப்பமரம் இருப்பது அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமம்தான்.
கோடை காலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. தழைத்து நிற்கும் பசுமையான வேப்பமரங்களை தினந்தோறும் பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சி உணடாகுமென நாட்டு வைத்தியத்தில் சொல்கிறார்கள். இப்படியாக நாம் வேப்ப மரங்கள் உள்ள சூழலில் வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது, அக்னி நட்சத்திரம் போன்ற சூழ்நிலையில் வேப்ப மரங்கள் தரும் குளிர்ச்சியான நிழல் ஒரு வரபிரசாதம்! கொளுத்தும் வெயிலில் நூறு மீட்டர் நடப்பதற்குள் அங்கே இடையில் ஒரு வேப்பமரம் ரோட்டோரமாக நின்றிருந்தால், அதைவிட ஒரு சொர்க்கம் இருக்காது என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு நன்றாக விளங்கும்.
 நாம் ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமான வருங்கால தலைமுறைகளைப் பெறமுடியும் என்பது உறுதி. தமிழகத்தின் பருவநிலையும் மண்ணும் வேம்பு வளர்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதால், வேப்ப மரங்களைப் பராமரிப்பதற்கு பெரிதாக நாம் மெனக்கெடத் தேவையில்லை.
Source : http://isha.sadhguru.org/blog/ta/veppamaram-nattu-vaithal-vaithiyar-thevaiyillai/

Rajakkamangalam sports club – கருவேல மரங்களை அழிக்கும் இளைஞர்கள்

Rajakkamangalam

சுற்றுச்சூழலை காப்பதற்காக, கிராமங்களைத் தத்தெடுத்து மாத ஊதியத்தின் ஒரு பகுதியைச் செலவிட்டு, சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் இளைஞர்கள், புருவம் உயர்த்த வைத்துள்ளனர். அவர்களின் விழிப்புணர்வால், சீமைக் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்ட இடம் தற்போது விளையாட்டுப் பூங்காவாக உருவாகி உள்ளது.

ஊருக்கு 10 இளைஞர்கள் சமூக அக்கறையுடன் இருந்தால், அந்த கிராமத்தின் முன்னேற்றப் பாதை பிரகாசமானதாக இருக்கும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம். இக்கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் 2001-ம் ஆண்டிலேயே, தாங்கள் விளையாட்டுப் பயிற்சி எடுப்பதற்காக ஒரு மைதானத்தை உருவாக்கும் முயற்சியில் இறங் கினர். அங்கு புதராக படர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் அகற்றினர்.

அதன் பலனாக, கபடி, கைப்பந்து, கோகோ, கூடைப்பந்து மற்றும் உடற்பயிற்சிகள் எடுப்பதற் கான சிறந்த விளையாட்டு மைதானமாக அது மாறியது. அங்குப் பயிற்சி எடுப்பதற்காக சுற்றுச்சூழலை இயற்கை சூழலுடன் மாற்றிய இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று அரசுப் பணியில் உள்ளனர். அனைவருமே விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த வர்கள். சீமைக் கருவேல மரங் களை அழித்து விளையாட்டு மைதானமாக்கியதன் விளைவு அவர்கள் எதிர்காலம் பிரகாச மானது. அதற்கு நன்றிக்கடனாக அக்கிராமத்தை தத்தெடுத்த அந்த இளைஞர்கள், அப்பகுதி முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.

சீமைக் கருவேல அழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுப்ரதீபன், மைசூரு ஸ்டேட் வங்கி உதவி மேலாளர் ஜீவகுமார், பொறியாளர் அருள், தலைமைக் காவலர் சுரேஷ், மென்பொறியாளர் தினேஷ் ஆகியோர், தங்களது முயற்சி குறித்து, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ராஜாக்கமங்கலத்தின் சுற்றுப் பகுதிகள் எங்கும் கருவேல மரங்கள் அதிக அளவில் பெருகி உள்ளன. கார்பன்டை ஆக்ஸைடை அதிகமாக வெளி யிட்டு, சுற்றுச்சூழலை கெடுத்தல், ஈரப்பதத்தை உறிஞ்சி பருவமழை பெய்யவிடாமல் தடுப்பது, நிலத்தடி நீரை மாசு கலந்த தண்ணீராக மாற்றுவது, கால்நடைகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பது, நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சி நீர் ஆதாரத்தை குறைப்பது போன்ற கருவேல மரத்தின் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு பேனர்களை ஊரில் வைத்துள்ளோம்.

இங்கு உள்ள தெக்குறிச்சி, அளத்தங்கறை, பண்ணையூர், முருங்கவிளை போன்ற கிராமங்களிலும் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கி உள்ளோம். மின்வாரியம், ஊராட்சி, பொதுப்பணித் துறை போன்ற இடங்களிலும் துறை அனுமதி பெற்று சீமைக் கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகிறோம்.

விடுமுறையிலும் பணி

பிற மாவட்டங்களில் பணி யாற்றி வரும் இப்பகுதி இளைஞர்கள் விடுமுறை நாட்களில் இப்பணி மேற்கொள்ள இங்கு வந்துவிடுவார்கள். சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, மக்களுக்குப் பலன் தரும் புங்கை மரம் போன்றவற்றை நட்டு கொடுக்கிறோம். மாத ஊதியத்தின் ஒரு பகுதியை இதற்காக செலவழித்து வருகிறோம். இன்னும் ஓராண்டில் சீமைக் கருவேல மரம் இல்லாத கிராமங்களாக ராஜாக்கமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதியை மாற்றிவிடுவோம் என்றனர்.

Source : The Hindu

 

Two injured in bus accident near kulasekaram

kulasekharam-bus-accident

 

குலசேகரத்தில் அதிவேகமாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தாய், மகள் படுகாயம். காயமடைந்தவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Arunachala college bus accident near kulasekaram. The Mother and daughter injured. Both were admitted to the nearest hospital for treatment.

Can we do this to clean the beaches in Kanyakumari?

garbage

Out of 38 tonnes garbage collected during Chennai Coastal Cleanup 56% (21 tonnes) is being segregated in 9 different categories to be recycled and reduce impact on the environment:
(from left to right / top to bottom)

1) PET Bottles
2) High grade plastics: water/milk/curd/oil packets
3) Plastic Glasses
4) Plastic Spoons
5) Plastic/Aluminium Caps
6) Thin Plastics wrappers
7) Glass Bottles
8) Tetra Packs
9) Metal/Aluminium

Segregation is nearing completion. Stay tuned for interesting statistics on recycling / energy savings / environmental conservation!

Kanam Latex Pvt Ltd has started a project to clean Kanyakumari District

Kanam Latex Pvt Ltd has started a project to clean the Peruvilai tank in Parvathipuram junction, Nagercoil. Kanam Latex in association with the PWD, Aloor Panchayath and INTACH want to clean the tank and convert the water body into a clean lake. We appreciate Kanam Latex and their partners for allotting funds for this nobile cause.

These are people taking an effort to Make Kanyakumari District Great Again!

Peruvilai

Peruvilai-tank

Heavy rain in kanyakumari district

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

nagercoil-rain
 தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விடாமல் கன மழை கொட்டி வருவதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

 
நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பலத்த மழை காரணமாக பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழையின் காரணமாக வள்ளியாறு, பரளியாறு, குழித்துறையாறு, சுசீந்திரம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது.
தொடர் கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
nagercoil-rain1
தொழிலாளர்கள் தவிப்பு 
குமரியில் பெய்து வரும் தொடர்மழையினால் மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை, தோவளை, இராமனாதிச்சன்புதூர் உள்ளிட்ட இடங்களில் செங்கல்சூளை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.
வேலையிழப்பு 
குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
 திற்பரப்பு அருவியில் வெள்ளம் 
குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்த மழையினால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவியில் குளிக்கசுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியூர்களிலிருந்து அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
 படகு போக்கு வரத்து நிறுத்தம்
 கன்னியாகுமரி கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Thiruvattar : திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் டீக்கடைக்குள் புகுந்தது 7 பேர் படுகாயம்

Luxury-car-ran-erratically-near-Thiruvattar-tikkataikkul_nagercoilinfo

திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

டீக்கடைக்குள் புகுந்த கார்

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தாணவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (வயது 26). இவர் சொகுசு காரில் அழகியமண்டபத்தில் இருந்து மாத்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். காரில் ஜஸ்டின் ராஜ் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் கும்மாளம் இட்டபடி காரில் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் கார் வேர்கிளம்பி அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே சொகுசு கார், அந்த பகுதியில் ரோட்டோரம் இருந்த தங்கையா (71) என்பவருடைய டீக்கடைக்குள் புகுந்தது.

7 பேர் படுகாயம்

இந்த விபத்தில் தங்கையா, டீக்கடைக்குள் இருந்த வீயன்னூரை சேர்ந்த பால்ராஜ் (48) மற்றும் சசிகுமார் (45), கடைக்கு வெளியில் நின்ற  பூவங்கோடை சேர்ந்த மனோன்மணி (60), வேர்கிளம்பியை சேர்ந்த ரகு (40), அருவிக்கரையை சேர்ந்த ஜோன்ஸ் (40), காரை ஓட்டிவந்த ஜஸ்டின் ராஜ் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.

இதில் மனோன்மணி, ரகு, ஜோன்ஸ், தங்கையா, ஜஸ்டின் ராஜ் ஆகிய 5 பேரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பால்ராஜ், சசிகுமார் ஆகிய 2 பேரும் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஜஸ்டின் ராஜ் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Kanyakumari Fishing: தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்

colachel-fish

தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

தடைகாலம்

ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் மற்றும் மீன் பிடி கப்பல்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி நள்ளிரவு வரை, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல இந்த ஆண்டுக்கான தடை காலம் கடந்த 29-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் மாதா வணக்கம் திருவிழா நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.

மீன் பிடிக்க சென்றனர்

இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் தடைகாலத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சின்னமுட்டத்தில் இருந்து 250 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

காலையில் இருந்து மாலை வரை மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு புறப்பட்டனர். மாலை 6.30 மணி முதல் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு மீனவர்களின் படகுகள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து வரிசையாக படகுகள் வந்தன.

உயர் ரக மீன்கள் சிக்கின

உடனே மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை 50 கிலோ எடையுள்ள பாக்ஸ் மற்றும் குட்டைகளில் எடுத்துக்கொண்டு தலையில் சுமந்தபடி ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

கரைக்கு திரும்பிய மீனவர்களின் வலையில் உயர் ரக மீன்களான நெய் மீன், பாறை, கணவாய் மற்றும் நவரை, கோவாஞ்சி, வெளமின், பண்டாரி, பூ மீன், சாளை ஆகியவை ஏராளமாக சிக்கி இருந்தன. இவற்றில் கணவாய், நவரை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

போட்டி போட்டு ஏலம்

மீன் ஏலக்கூடத்தில் குமரி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் ஏராளமானவர்கள் மீன்களை ஏலம் எடுக்க காத்து இருந்தனர்.

மீன்கள் ஏலக்கூடத்துக்கு வந்ததும், அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 50 கிலோ எடை கொண்ட நவரை பாக்ஸ் ரூ.2 ஆயிரத்துக்கும், 10 கிலோ எடை கொண்ட பண்டாரி ஒரு மீன் ரூ.3,500-க்கு ஏலம் போனது. புள்ளி கணவாய் 10 கிலோ ரூ.5 ஆயிரத்துக்கும் போனது. பாறை மீன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது.

விலை கட்டுப்படியாகவில்லை

கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த கன்னியாகுமரி மீனவர் சிலுவை கூறியதாவது:-

45 நாள் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்றோம். மீன்கள் அதிக அளவு கிடைத்தது. ஆனால் நவரை, கணவாய் போன்ற மீன்கள் குறைவாகவே கிடைத்தன. ஆனால் விலை கட்டுப்படியாகவில்லை. நாங்கள் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதற்கு டீசல் மற்றும் மீனவர்களுக்கான கூலியே அதிகமாகிறது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு மீனவர் சிலுவை கூறினார்.

அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

சின்னமுட்டத்துக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக வந்தேன். மீன்கள் அதிகம் கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் அதன் விலையும் அதிகமாக உள்ளது. நவரை ஒரு பாக்ஸ் ரூ.1,500-க்கு ஏலம் எடுப்போம். ஆனால் இந்த முறை ரூ.2 ஆயிரத்துக்கு எடுத்தோம்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

Heaven on Earth – Chittar II Dam, Kanyakumari

Its Anantya Resorts in Chittar II Dam in Kanyakumari district. The scenic mountain ranges and the thunderstorm which came was all as per my script. Its still dazzling in my eyes. This is a must visit dam and the resort was amazing. The dam fish we ate was with amazing taste, even tastier than Vanjaram (Seer Fish). I would like to share some scenic photos that would make you envy all.

13301449_1855537731340169_5751429860693538280_o

 

13268351_1855537814673494_4940630482284591646_o

 

13346311_1855537874673488_1958641750539963154_o

 

12322598_1855538091340133_3639165653825858237_o

 

Source : Tamil Nadu Weatherman FB