All posts by admin

kanyakumari : அரை நூற்றாண்டு வரலாறு அடிபட்டு போனது

சில தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே, ஆட்சி அமைக்கும் என்ற, ‘ராசி’ உண்டு. அந்த வகையில், அரை நுாற்றாண்டாக இந்த ராசி உடைய முக்கியமான தொகுதி, கன்னியாகுமரி.
கடந்த, 1971ம் ஆண்டு முதல், இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே, மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது.

1971ல் நடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ராஜா பிள்ளை வெற்றி பெற்றார்; கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைந்தது.பின், தி.மு.க.,வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவங்கி, 1977ல் சட்டசபை தேர்தலை சந்தித்தார். 1977 முதல், 84 வரை, கன்னியாகுமரி தொகுதி, அ.தி.மு.க., கோட்டையாகவே இருந்தது.அதன்பின், 1989ல் நடந்த தேர்தலில், மீண்டும் இங்கு தி.மு.க., வேட்பாளராக சுப்பிரமணிய பிள்ளை வெற்றி பெற, தி.மு.க., ஆட்சி அமைத்தது. 1991 தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற, ஜெயலலிதா, முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார்.

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், 1996ல் தி.மு.க.,வின் சுரேஷ்ராஜனும், 2001ல், அ.தி.மு.க.,வின் தளவாய் சுந்தரமும், 2006ல், சுரேஷ்ராஜனும், 2011ல், கே.டி.பச்சைமாலும் வெற்றி பெற்றனர். அப்போதெல்லாம் அவர்கள் சார்ந்த கட்சிகளே ஆட்சி பீடத்தில் அமர்ந்தன.
பிரிந்த ஜாதி ஓட்டுகள்தொகுதியில் பெரும்பான்மையாக வெள்ளாளர் சமுதாயத்தினர் தான் உள்ளனர். அதனால் தான், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே, தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகள் நிறுத்தி வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2011ல் முதல் முறையாக, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கே.டி.பச்சைமால் நிறுத்தப்பட்டார்.

குளச்சல் தொகுதியைச் சேர்ந்த அவர், இங்கு வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனார். அப்போது, இந்த தொகுதியில் போட்டியிட்ட வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க., பாணியை பின்பற்றி, இம்முறை கன்னியாகுமரி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக கிறிஸ்தவ நாடாரான ஆஸ்டின் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து, வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் போட்டியிட்டார்.

இதில், அரை நுாற்றாண்டு வரலாற்றை மாற்றும் வகையில், மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்க, தொகுதியில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரமும், பா.ஜ., வேட்பாளர் மீனா தேவும் போட்டியிட்டதால், ஜாதி ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வின் நாடார் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பாகி விட்டது.

தி.மு.க., – அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம், 5,912 ஓட்டுகள் தான். ஆனால், பா.ஜ., வேட்பாளரோ, 24 ஆயிரத்து, 638 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் பெரும் பங்கு, வெள்ளாள சமுதாயத்தினரின் ஓட்டுகள் என்பதை மறுக்க முடியாது.

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம் (Toppukkaranam)

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

* தினந்தோறும் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலேகூட போதும்.

* உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்றுகொள்ளுங்கள்.

* உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும்.

* வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* அதேபோல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* பிடித்துக் கொள்ளும்போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும்
இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

* மூச்சை நன்றாக வெளியே விட்டபடி, அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து   நில்லுங்கள்.

* ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து செய்வது கடினமாக இருப்பவர்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடங்கள் என படிப்படியாக அதிகரித்துக்கொள்ளுங்கள்.

…………………………………………………

மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன . நாடிகள் சுத்தம் பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர், எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணத்தை பற்றிச் சொல்லும்போது, “இந்த உடற்பயிற்சி மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் தூண்டப்பட்டு சக்தி பெறுகின்றன.” என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். மேலும், தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் இந்த உடற்பயிற்சியை சில நாட்கள் தொடர்ந்து செய்தபிறகு, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.

அதேபோல யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர், ”தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன” என்று சொல்கிறார். ”இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன, மூளையின் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.” எனவும்  அவர் சொல்கிறார்.

 

Voter Awareness Programme Conducted in nagercoil

Helium balloon with a message in Nagercoil

As part of Systematic Voters’ Education and Electoral Participation Programme (SVEEP), the Election Department launched an illuminated helium balloon near Anna bus stand here on Thursday.

Launching the balloon, District Election Officer and Collector Sajjansingh R. Chavan said that it would help raise awareness of ethical voting.

The balloon, with the mark ‘May 16’ to remind voters of their democratic duty, was launched to ensure 100 per cent voting.

Efforts were also on to get all those above 18 years of age enrolled as voters through students who had been identified as ‘college ambassadors.

Various programmes – distribution of pamphlets, screening of awareness documentaries and cultural programmes – were organised by the administration to motivate voters to exercise their franchise without fail, Mr. Chavan said.

The district administration had identified two more places for launching the helium balloon, officials said.

Later, Mr. Chavan administered a pledge to NSS volunteers of Hindu College and flagged off an awareness rally at Elluvilai panhayat union office.

District Revenue Officer S. Elango, Nagercoil Returning Officer and RDO S. Madhiyazhagan, Mahalir Thittam Project Director T. Sadayappa Vinayaka Murthy and others were present.

80-year-old NRI Walks from Kanyakumari to Delhi for Charity

An 80-year-old NRI based in the UK today concluded his 3,000-km walk from Kanyakumari to Delhi to spread awareness about blindness and raise funds.

Balwant Singh Grewal was received at the India Gate here by Urban Development Minister M Venkaiah Naidu who felicitated him for his accomplishment.

Grewal said his walk has generated substantial awareness about blindness. At a gurudwara in Nagpur, about 200 women came forward to donate their eyes, he claimed.

Naidu termed his initiative as “inspiring and commendable” and said it would inspire many to come forward to donate eye.

The minister said the government has been taking several measures for the benefit of the differently-abled to make them realise their inherent potential.

Grewal, who heads the UK-based charity India Association, started the walk on October 26 last year. The fund he collected during the course of his walk will be donated to ‘Saksham’, an organisation working for the cause of the blind, and the Prime Minister’s National Relief Fund.

Heavy traffic in marthandam kanyakumari district

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினம்தோறும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் கள் ஆமை வேகத்தில் சிரயான்குழி முதல் குழித்துறை வரை சுமார் மூன்று கிலோமீட்டர் செல்ல ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகின்றது.

 
 சதாரணமாக காலை எட்டு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை தொடரும் இந்த அவலத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி விருந்து நகர் உட்பட பல மாவட்டங்களை சேர்த்த விமானபயணிகளும் சிக்கி பல நேரங்களில் விமானங்களை தவற விடுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் விடியற்காலையிலே மார்த்தாண்டத்தை தாண்டி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் பயணத்தில் கவனம் செலுத்தும் கட்டாய சூழலுக்கு தள்ளபட்டுள்ளனர் இது போன்று அரசு அலுவலர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் இருமாநிலத்தை சேர்ந்த பலதரப்பினர் சுற்றுலா பயணிகள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இங்கு சாதாரண நாட்களில் ஒரு மணிநேரமும் சீசன் நாட்களில் இரண்டு மூன்று மணிநேரம் வரை டிராபிக் ஜாம் பகுதியில் சிக்கி சூட்டையும் புகையையும் உணவாக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
 
 இந்த மூன்று கிலோமீட்டர் பகுதிகளில் விபத்து நடக்காத நாட்களே இல்லை உயிர் பலி நடக்காத வாரமே இல்லை பாதசாரிகளுக்கு நடக்க பாதையே இல்லை ராஜவழிபாதை என்று அழைக்கப்பட்ட 120 அடி சாலை பம்மம் முதல் தட்டாகுடி இறக்கம் வரை தற்போது 20 அடி மட்டும் காணபடுகின்றது வர்தகர்கள் இந்த எல்லைக்குள் சுமார் இருநூற்று ஐம்பது க்கும் குறைவான அளவு இருப்பர் அவர்களுக்கு கடைகள் வாடகைக்குக் கொடுத்தவர்கள் நூற்றுக்கும் குறைவானவர்கள் இவர்களின் கடைகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் சில இடம் இடிக்கப்பட்டு விடும் என்பதற்காக சங்கம் என்ற பெயரில் வர்த்தகர்கள் பாதிக்கபடுவார்கள் என்ற புரளியை கிளப்பி பெரும் முதலாளிகள் குளிர்காய பார்கின்றனர். 
 
 நெல்லை திருவனந்தபுரம் சென்னை போன்ற பகுதிகளில் ஏறாளமான மேம்பாலங்கள் வந்ததால் எந்த வர்த்தகர்களுக்கும் வியாபாரம் பதிப்பு ஏற்படவில்லை மாறாக வியாபாரம் வளர்ச்சியே கண்டுள்ளது மாவட்ட வளர்ச்சிக்கு தடை நிற்கும் முதலாளித்துவ சக்தி களுக்கும் சந்தரப்பவாத அரசியல் கட்சிகளுக்கும்பாடம் புகட்டவும் நம் தலைமுறை போக்குவரத்து நெரிசல் இன்றி இலக்கை அடைய மேம்பாலம் தேவை சிந்தித்து செயல்பட அன்பு வேண்டுகோள்.

ஐ.அருள் குமார்
கன்னியாகுமரி மாவட்ட பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்

ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய உணவு முறை (Ethnic Food system)

தமிழகத்தில் பன்னெடுங்காலமாகப் பெண்கள் பூப்பு எய்திய பின் பிரத்யேகமான ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பு எய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காகச் சுருங்கிவிட்டது.

பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்; கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது என்பதே இந்தச் சித்த மருத்துவ உணவு முறையின் சிறப்பம்சம். பூப்பு காலச் சித்த மருத்துவ உணவு முறை:

தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக (Ethnic Food system) நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் சித்த மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு நேரமோ ஒரு வேளையோ உட்கொள்வது நல்லது. இதில் எள் -உளுந்து -வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.

ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளைச் சமூகத்தில் பெருக்க இந்த உணவு முறை துணைச் செய்யும். ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை.

மாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை

சேர்க்கப்படும் பொருட்கள்: வெள்ளை எள் – ஒரு கப், சர்க்கரை முக்கால் கப், ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை: வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும்வரை வறுத்து, மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக்கொள்ளவும்.

மருத்துவப் பயன்: பெண்களுக்குப் பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் phyto oestrogen எள்ளில் உள்ளது.

மாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி

சேர்க்கப்படும் பொருட்கள்: சம்பா அரிசி- ஒரு பங்கு, முழு உளுந்து – கால் பங்கு, ஏலக்காய் பொடி – சிறிதளவு, கரும்பு வெல்லம் – தேவையான அளவு

செய்முறை: சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.

மருத்துவப் பயன்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.

மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி

சேர்க்கப்படும் பொருட்கள்: வெந்தயம் -ஒரு பங்கு, சம்பா அரிசி – நான்கு பங்கு

செய்முறை: சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

மருத்துவப் பயன்: இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகள் சரியான தடிமனுக்குப் பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாகத் திகழும்.

Source : TheTamilHindu

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குளச்சல் வர்த்தக துறைமுகம் வந்தே தீரவோண்டும் என்று போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு அரசியல் சார்பு இல்லாமல், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு நடத்திய ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி…

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த அனைத்து பொதுமக்களுக்கும் (கிறிஸ்த்தவ, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல உள்ளங்ககளுக்கும்) கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..!!!
–***குமரி. ஸ்ரீ மகேஷ் FB

எதிரியை வெற்றிகொள்வது எப்படி?

ஆதிகாலம் தொட்டு இன்று வரை நடந்துகொண்டிருக்கும் நிதர்சனம் இது – நமக்கு வேண்டப்படாதவரோ அல்லது நம் எதிரியோ அவர் வாழ்க்கையில் சரிவை சந்தித்தால் நமக்கு மகிழ்ச்சிதான். அந்த எதிரியையும் வெற்றிகண்டு நாம் வாழ்வில் உயர்வது எப்படி? இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு…

வெளியே தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. காரணம் கேட்டேன். யாரோ ஒரு நடிகரின் படம் தோல்வியடைந்துவிட்டதாம். இன்னொரு நடிகரின் ரசிகர் மன்றம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாகச் சொன்னார்கள். என்ன அபத்தம் இது?

கால்பந்து விளையாடப் போகிறீர்கள். உங்களுக்கு எதிராக ஒரு அணி இருக்கும். அது உங்களைவிட திறமையான அணியாக இருந்தால், உங்களை கோல் போடவிடாமல் தடுக்கும். நீங்கள் அசந்த நேரம் உங்கள் பக்கம் கோல் போட்டுவிடும். அதற்காக அந்த அணியை எதிரியாக நினைத்து, மைதானத்தை விட்டே துரத்திவிடுவீர்களா என்ன?

எதிர்க்க இன்னொரு அணியே இல்லை என்றால், நீங்கள் நினைத்த நேரத்தில் பந்தை எடுத்துக் கொண்டு எதிர்ப்பக்கம் போகலாம். அங்கேயிருக்கும் இரண்டு கம்பங்களுக்கு நடுவில் எத்தனை தடவை வேண்டுமானாலும் உதைத்து கோல் போடலாம். ஆனால், அதன் பெயர் கால்பந்தாட்டமா? அல்லது, வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்பதற்காக, உங்களுக்கு இணையாக இல்லாத கற்றுக்குட்டிகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டிருப்பீர்களா?

யமகுசி என்ன செய்தார்?

யமகுசி, கராத்தேயில் மிகச் சிறந்த வீரர். பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தவர். ஒருமுறை போட்டியில் அவர் தன் குருவையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனக்குத் தெரிந்த அத்தனை விதத்திலும் முயற்சி செய்தார் யமகுசி. குருவை வீழ்த்த முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்தார் யமகுசி. கோபத்தில் தவறான சில வீச்சுகளை முயற்சி செய்ததில், நிறைய காயங்களானதுதான் மிச்சம்.போட்டி முடிந்ததும், குருவைப் பணிந்து தன் தோல்விக்குக் காரணம் கேட்டார்.
“நீ என்னை எப்படிப் பார்த்தாய், மகனே?”
“போட்டியென்று வந்துவிட்டால், குரு, சிஷ்யன் எல்லாம் கிடையாது. உங்கள் பலவீனங்களை கண்டுபிடித்து உங்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்றுதான் பார்த்தேன். ஆனாலும், முடியவில்லையே குருவே!”
ஒரு தரையில் ஒரு கோடு வரைந்தார்.
“இதை சிறிதாக்க வேண்டுமானால், என்ன செய்வாய்?”
யமகுசி அந்தக் கோட்டின் ஒரு பகுதியை அழித்துக் காட்டினார்.
“இதே கோடு அழிக்க முடியாதபடி பாறையில் இருந்தால்?”
யமகுசிக்கு விடை சொல்லத் தெரியவில்லை.
குரு அந்தக் கோட்டின் பக்கத்தில் அதைவிட ஒரு பெரிய கோடு வரைந்தார்.
“இப்போது முதல் கோடு சிறியதாகி விட்டதல்லவா? யாரையாவது வெற்றி கொள்ள வேண்டுமானால், அவனைத் தாழ்த்த வேண்டுமென்று முயற்சி செய்யாதே! அவனைவிட அதிகமான உன் திறமையை வளர்த்துக் கொள். உனக்காக விளையாடு. அவனுக்கு எதிராக விளையாடாதே!”
யமகுசி தெளிவடைந்தார்.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுடன் போட்டு போடுபவரை உங்கள் எதிரியாகப் பார்ததீர்களானால், உங்கள் நிம்மதி தொலைந்து போகும்.
யார் முட்டாள்?
தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் ‘முட்டாள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்?
காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். அவர் இப்போது எதுவும் செய்ய வேண்டாம். காறித் துப்ப வேண்டாம். கல் எடுத்து அடிக்க வேண்டாம். சும்மா நின்றிருந்தாலே போதும். உங்களுக்குப் படபடப்பு வந்துவிடுமல்லவா? காரியங்கள் தாறுமாறாகிவிடுமல்லவா?
அவர் வலியவரோ, எளியவரோ… ஆனால், சொன்னபடி உங்களை முட்டாளாக்கிக் காட்டிவிட்டார் அல்லவா?

நீங்கள் நண்பர் என்று நினைப்பவருக்குக் கூட இவ்வளவு சக்தி இல்லையே? யாரையாவது நீங்கள் எதிரியாக நினைத்தால், அவர் ஆற்றல் மிகுந்தவராகி விடுவதைக் கவனித்தீர்களா?
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்… நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை. ஒருவரை அழித்தால், அடுத்தவர் தலை தூக்கிக் கொண்டு நின்றிருப்பார். உங்கள் ஆற்றலின் பெரும்பகுதி ஆக்கப்பூர்வமாய்ப் பயன்படாமல், அழிப்பதிலேயே வீணாகிவிடும்.
அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்.
பொறாமைக்கும், அச்சத்துக்கும் இடம் கொடுத்தால் உங்கள் திறமைதான் மழுங்கிப்போகும். எனவே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காக இருக்கட்டும். இன்னொருத்தருக்கு எதிராக இருக்க வேண்டாம். அப்போதுதான், உங்களுக்கான சிகரத்தைச் சென்றடையும்வரை அந்தப் பயணம் ஆனந்தமாயிருக்கும்.
முழுத்திறமையும் வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுவதில்தான் உண்மையான வெற்றியே இருக்கிறது. அதற்கு உங்கள் உடல், மனம் – இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும்.
இதற்கு முறையான யோகாவை விடச் சிறந்த சாதனம் இல்லை.

Planting Saplings by We Youngsters Group

Announcement to #Nagercoil #Kanyakumari People
As a part of our vision #WeYoungsters group planning to #Grow plants on some streets to make clean environment on 24th and 25th March 2016.
If you wish to join with us please feel free to contact us…
As well if anyone of you have any contact with #Ramjee_Garden or any other nurseries in #Nagercoil please help us to get free plants.
We prefer plant rather than money…
We are ready to give a chance please be supported.
Those who willing to donate Plants or Money.
Please contact
#Deepak: 9080087002
#Dinesh : 9789117231
#Gowtham: 9597336130
#Arun: 9994142963
www.facebook.com/weyoungsters